ஹமாஸ்க்கு எதிரான போர் முடிந்த பிறகு காசாவை ஆட்சி செய்ய போவது யார்? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பதில்
டெல் அவிவ்: காசாவை ஆட்சி செய்யவோ, ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அதேவேளையில் காசாவிற்கு சிறப்பான எதிர்காலத்தை அளிக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் திக்குமுக்காடிப்போன இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஒருமாதத்தை கடந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நடைபெற்று வருகிறது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல், வான், தரை என முப்படைகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்து 800-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்- ஹமாஸ் போரால் காசாவில் மிகவும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல், காசாவுக்கு வழங்கி வந்த மின்சாரம், எரிபொருள், குடிநீர் ஆகியவற்றை நிறுத்தியுள்ளது.
இதனால் காசாவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் அங்கே ஆயுதங்கள், ஏவுகணைகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைக் குவித்து வருகிறது. அது மட்டும் இன்றி பல கி.மீட்டர்களுக்கு ஹமாஸ் அமைப்பினர் வைத்து இருக்கும் சுரங்க பாதைகள் மூலம் இஸ்ரேல் படை மீது கொரில்லா தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறதாம்.
இதனால், போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால், காசா மற்றும் இஸ்ரேல் என இரு இடங்களிலுமே பதற்றம் நிறைந்தே காணப்படுகிறது. இதனிடையே, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது என்று அமெரிக்கா கூறி வருகிறது. கசாவை சுற்றி வளைத்து இருக்கும் இஸ்ரேலின் அடுத்த கட்ட மூவ் என்ன என்பதை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளே உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்த நிலையில், இது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவை ஆக்கிரமிக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு மேலும் கூறுகையில், காசாவை நிர்வகிக்கும் எண்ணமோ ஆக்கிரமிக்கும் எண்ணமோ எங்களிடம் இல்லை. நானால், காசாவிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறோம்.
முடக்கப்பட்டுள்ள அந்த பிராந்தியத்தை அனைத்து படைகளையும் வெளியேற்றிவிட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். காசாவில் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். சிவில் அரசாங்கத்தை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது" என்றார். எனினும், அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது குறித்து தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. முன்னதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்னி பிளிங்கன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து பேசுகையில், காசா முனையில் கட்டுப்பாட்டைபாலஸ்தீனம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications