35 உடல்களை பார்த்தோம்.. புகைப்படம் எடுக்க முடியவில்லை.. பாக்.கில் இந்திய தாக்குதலின் நேரடி சாட்சி!
பாகிஸ்தானில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 35 பேர் வரை பலியானதை நேரில் பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 35 பேர் வரை பலியானதை நேரில் பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த வாரம் பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் உள்ளே புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. மொத்தம் பாலகோட் உள்ளிட்ட 3 இடங்களில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. வெறும் மரம் மட்டுமே விழுந்தது, இந்தியா பொய் சொல்கிறது என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதாரங்களை கேட்டது.

உள்ளே விடவில்லை
இதுகுறித்து தாக்குதல் நடந்த பாலகோட் உள்ளிட்ட மூன்று பகுதிகளுக்கு அருகில் இந்திய எல்லையில் வசிக்கும் மக்கள் பேட்டியளித்துள்ளனர். இவர்கள் பேட்டியில், இந்த தாக்குதல் நடந்ததும் அந்த பகுதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றிவளைத்துவிட்டதாக கூறியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தது. அதன்பின் அங்கு மக்கள் யாரையும் விடவில்லை.

35 பேர் 12
இதில் எங்களுக்கு தெரிந்தே 35 பேர் பலியானார்கள். அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கி இருந்தனர். அதில் 12 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். சிலர் முன்னாள் ராணுவ வீரர்கள். இவர்கள்தான் இந்திய விமானப்படை தாக்குதலில் பலியானது.

ஆம்புலன்ஸ் மூலம்
இவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கிருந்த யாரும் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. அதனால் யாரும் அங்கிருந்த உடல்களை புகைப்படம் எடுக்க முடியவில்லை. இதனால்தான் புகைப்படம் வெளியாகவில்லை, என்றுள்ளனர்.

முக்கியமானவர்கள்
இதில் முன்னாள் பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ அதிகாரி சலீம் பலியானதாக கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் ராணுவ அதிகாரி சரார் சாக்ரி காயம் அடைந்தார். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முப்தி மெயின், உசான் காணி ஆகியோரும் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications