உங்களில் யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது.. ஈரான் பகீர் மிரட்டல்.. அமெரிக்காவுடன் மோதல்!
கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
Recommended Video
பாக்தாத்: கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஈரான் மீது முழுக்க முழுக்க 100% பொருளாதார தடையை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
அதன் ஒரு கட்டமாக தற்போது ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதான் தற்போது ஈரானை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன சொன்னது
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்துள்ளது. ஈரானிடம் இருந்துதான் இந்தியா தற்போது 10% எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. இந்த எண்ணெய்யை இந்தியா இனி நிறுத்த போகிறது.

மற்ற நாடுகள்
அதேபோல் சீனா, துருக்கி ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் உத்தரவிற்கு கட்டுப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் ஈரான் தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. கடல் வழி எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரே வழியாக இருக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக ஈரான் நாடு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இது எண்ணெய் வள நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

ஹோர்முஸ் ஜலசந்தி எப்படி
ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இதை ஈரான்- ஓமன் நாடுகள் பிரித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனாலும் இதில் எப்போதும் ஈரானின் கையே ஓங்கி இருக்கும். இந்த ஒரே வழி மூலம் தான் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 90 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது.

கடும் எச்சரிக்கை
இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தி மூட போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தங்களை மீண்டும், சீண்டினால் இந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி விடுவோம். நாங்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய கூடாது என்றால், யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எங்களை சீண்ட வேண்டாம் என்று ஈரான்எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வருகிறது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications