பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம்.. ஏதாவது செய்யுங்க.. ஷெபாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானில் நெருக்கடி
இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் நாம் பட்டினி கிடந்தே சாகப் போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தானின் 80 சதவீதம் விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தினால் பாகிஸ்தான் பெரிய அளவிலான இழப்பை சந்திக்கும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை இந்த அதிரடி தொடரும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது
இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்தான், இந்தியாவுக்கு தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக 4 கடிதங்களை பாகிஸ்தான் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டு இருப்பதாகவும், இதனால் நம்பிக்கை இழந்த நிலையில் அந்த நாடு தவிப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சொல்லப்போனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகும் அந்த நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், இந்தியாவோ தனது நிலைப்பாட்டை பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதாவது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக செய்ய முடியாது என்றும் , ரத்தமும் தண்னீரும் ஒன்றாக ஓடாது என்றும் இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
4 கடிதங்கள் அனுப்பிய பாகிஸ்தான்
சிந்து நதி நீர் ஒப்பந்தமானது நம்பிக்கை மற்றும் நட்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும், பாகிஸ்தான் இதற்கு எதிராக செயல்பட்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தது. இதனால்தான் பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வர சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என இந்தியா முடிவு செய்து. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எழுதிய நான்கு கடிதங்களும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்தே அமைந்து இருந்தது.
பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பாகிஸ்தானின் நீரவளத்துறை கடிதத்தை அனுப்பியதாம். இந்த கடிதத்தை ஜல்சக்தி அமைச்சகம் வெளியுறவு துறைக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.
பட்டினி கிடந்தே சாக போகிறோம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நிலை குலைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக தொடர்ச்சியாக கூறி வருகிறது. பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் பலரும், இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஷெபாஸ் ஷெரீப்பிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்களாம். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சையது அலி ஜாபர் கூறியதாவது: -
நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. நமக்கு வரும் தண்ணீரில் நான்கில் மூன்று பங்கு வெளிநாட்டில் இருந்தே வருகிறது. 10-ல் ஒன்பது பேர் சிந்து நதியை நம்பியே உள்ளோம். எனவே இது ஒரு தண்ணீர் குண்டு போன்றது. நமக்கு முன்னாள் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனை உடனே செயலிழக்க செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications