இது மாஸ்க்கா.. இதுக்கு அந்த பிளேக் நோயே பரவாயில்லை போலயே.. பீதியை கிளப்பிய அந்த காலத்து டாக்டர்கள்!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எனும் தொற்றுநோய் பரவத் தொடங்கியதும் அது தங்களுக்கு பரவாமல் இருக்க பாதுகாப்பு கவசம் (PPE kits), மாஸ்க்குளை மருத்துவர்கள் அணிந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் பிளேக் நோய் பரவிய போது மருத்துவர்கள் அணிந்திருந்த முகமூடியையும் டிரஸ்ஸையும் பார்த்தால் பயந்து விடுவீர்கள்.
Recommended Video
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உருவாகி இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சீனாவில் முதல் அலையிலிருந்து மீண்ட சீனா தற்போது இரண்டாம் அலையில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் இந்த நோயிலிருந்து மீள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக புபோனிக் பிளேக் என்ற நோய் பரவி வருகிறது.

தொற்றுநோய்
இது மிகவும் கொடூரமாக பரவக் கூடிய தொற்றுநோய் என கூறுகிறார்கள். சீனாவில் மங்கோலியாவுக்குட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பலியான நிலையில் தற்போது அந்த நகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மர்மோட் எனப்படும் ஒரு வகை அணிலின் இறைச்சியை தின்றதால் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாஸ்க்
கொரோனா பாதிப்பு தொற்றுநோய் என்பதால் அந்த நோய்க்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தும் மாஸ்க் அணிந்தும் வருகிறார்கள். அது போல் பொதுமக்களும் நோய் வராமல் தடுக்க மாஸ்க் அணிகிறார்கள். இதனால் தற்போது பிபிஇக்கும் மாஸ்க்கும் கிராக்கி ஜாஸ்தி.

என் 95 மாஸ்க்
இது நவீன காலம், என் 95 மாஸ்க், பிபிஇ கிட், கிளவுஸ், காலணி உறை, முகம் மறைக்கும் அட்டை எல்லாம் சரி. ஆனால் அந்த காலத்தில் பிளேக் போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட்ட போது இதுபோன்ற எந்த வசதியும் இல்லாமல் அது பரவாமல் காக்க அந்த காலத்து மருத்துவர்கள் எதை பயன்படுத்தியிருப்பார்கள் என்று கூகுளில் தேடினாலே கிடைக்கிறது. அதை பார்க்கும் போது அச்சமூட்டுகிறது.

பலி எண்ணிக்கை அதிகம்
அதாவது தற்போது சீனாவில் பரவியுள்ள புபோனிக் பிளேக் கடந்த 1347ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பரவி மனித வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய "சாதனையை" பதிவு செய்துள்ளது. இதை பிளாக் டெத் நோய் என்றும் கூறுகிறார்கள். இந்த நோய்க்காக வடஆப்பிரிக்கா, யுரேஷியாவில் 75 முதல் 200 மில்லியன் பேர் பலியானார்கள்.

மருத்துவர்கள்
அந்த புபோனிக் பிளேக் காலத்தில் மருத்துவர்கள் அணிந்த பாதுகாப்பு உடைகள் நீண்ட கயிறு மூலம் தலை முதல் பாதம் வரை கட்டப்பட்டிருக்கும். தலையில் வட்ட வடிவமான தொப்பி, முகத்தில் பறவை மூக்கு போன்ற முக கவசம், நீண்ட அங்கி, லெதர் கிளவுஸ், லெதர் பூட்ஸ், மூக்குக் கண்ணாடிகள், வாக்ஸால் ஆன நீண்ட அங்கிகள் ஆகியவற்றை அந்த காலத்து மருத்துவர்கள் பயன்படுத்தினர்.

பிளேக் பரவாது
அது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கையில் நீண்ட குச்சியை வைத்திருந்தனர். இதனை நீட்டுவதன் மூலம் மக்களிடம் இருந்து தள்ளி இருந்தனர். கொக்கு மூக்கு போல் நீண்டு காணப்படும் மாஸ்க்குகளை அணிவதால் கெட்ட காற்று மூலம் பிளேக் பரவாது என மருத்துவர்கள் நம்பினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications