பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம்
இஸ்லாாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர வன்முறை நடந்து வருகிறது. அங்குள்ள போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நிலவி வருகிறது.துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதுவரை 30 பேர் பலியான நிலையில் நம் நாட்டுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திடீர் வன்முறை ஏன் ஏற்பட்டது? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டுக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த இடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகும். இங்கு தற்போது வன்முறை நடந்து வருகிறது. போராட்டக்காரர்களுக்கும், பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தற்போது வரை 30 பேர் வரை பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 12 பேர் மட்டுமே இறந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சி்கிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது நமக்கு சொந்தமான பகுதியாகும். இதனால் அங்கு நிலவும் சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதுமட்டுமின்றி அங்கு நடக்கும் மோதல், வன்முறைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
''பாகிஸ்தான் தனது தோல்விகளை மறைக்கவும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் தொடர்ந்து பொய் செய்திகளையும் வீடியோக்களையும் பரப்பி வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை கண்டிக்கத்தக்கது. சர்வதேச சமூகம் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு அந்த நாட்டை பொறுப்பேற்க செய்ய வேண்டும்" என சாடியுள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது பலருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் பிரச்சனையின் பின்னணி பற்றி தேட தொடங்கி உள்ளனர். அதற்கான விடையை நாங்கள் தருகிறோம். பொதுவாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்த நாட்டில் எந்த அரசுகளும் கண்டுகொள்வது இல்லை. வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதற்கு தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசும் விதிவிலக்கல்ல. இவரது அரசும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டுக்கொள்ளாமல் உள்ளது. கோதுமை, மின்சாரம் உள்பட அடிப்படை தேவைகளுக்கான விலைகள் உயர்ந்துள்ளன.
இதனால் கடந்த ஓராண்டுகளாக அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. தொடக்கத்தில் மின்சார கட்டணம் மற்றும் கோதுமை மானியம் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இப்போது அரசியல் உரிமைகள், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் ஜனநாயக உரிமைகளை பெறும் வகையில் போராட்டம் தொடங்கி உள்ளது.
தற்போது ஜேஏஏசி (Joint Awami Action Commitee) சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த குழுக்களில் வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் உள்ளனர். இவர்கள் மின்சாரக் கட்டண உயர்வு, புதிய வரி விதிப்பு கொள்கை, மோசமான அரசு நிர்வாகம் உள்ளிட்டவற்றை கண்டித்தும், தங்களுக்கான அரசியல் உரிமைகள், நிர்வாக ரீதியான வெளிப்படை தன்மை, ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கவும் போராட்டங்களை தொடங்கினர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் தான் 30 பேர் வரை பலியாகி உள்ளனர். இதுபற்றி மனித உரிமை ஆர்வலர் தஸ்லீமா அக்தர் கூறுகையில், ''பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுபற்றிய தகவல் வெளியே பரவுவதை தடுக்க இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது'' என குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழல் பற்றி கவலை தெரிவித்துள்ளனர். நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications