பிரிட்டன் முடிவால் இந்திய நிறுவனங்கள் மீதான தாக்கம் எப்படி இருக்கும்?
Subscribe to Oneindia Tamil
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவானது சர்வதேச பொருளாதாரத்துக்கு கடுமையான சவாலாக இருக்கும். ஐரோப்பிய உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பிஇல் பிரிட்டனின் பங்கு 18%. பிரிட்டன் முடிவால் தம்முடைய பொருளாதாரத்தில் ஆறில் ஒரு பங்கை இழக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

இந்திய பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பில் ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போதைய பிரிட்டன்
- இங்கிலாந்தில் அமெரிக்கா, பிரான்ஸைத் தொடர்ந்து 3-வது பெரிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா.
- இங்கிலாந்தில் மட்டும் 800 இந்திய நிறுவனங்கள் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றன.
- ஐரோப்பிய சந்தையை இலக்காக கொண்டு செயல்படும் இந்திய நிறுவனங்கள், இங்கிலாந்தை மையமாக கொண்டுதான் செயல்படுகின்றன.
- பிரிட்டனில் மட்டும் சுமார் 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பை இந்திய நிறுவனங்கள் உருவாக்கி தந்துள்ளன.
- ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் இந்திய நிறுவனங்கள் தங்களது வர்த்தக வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டிய தருணம்.
- பிரிட்டனில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கான ஏற்றுமதிக்கான கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது.
- பிரிட்டனில் இருந்து இந்திய நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இடம்பெயரலாம்.
- பிரிட்டனின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமானது. அண்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் 10 ஆண்டுகள் முடிவில் இந்நிறுவனத்தின் ஆண்டு லாபத்தில் 1 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுமாம்.
- 2016-வது நிதி ஆண்டில் இந்தியா- பிரிட்டன் இடையே 14.02 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் இந்த வர்த்தகத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார் டெல்லி ஜே.என்.யூ. பொருளாதார பேராசிரியர் பிஸ்வஜித் தார்.
- 2007-ம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பிரிட்டன் வெளியேறுவதால் பிரிட்டனுடன் தனியாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனியாக ஒப்பந்தங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- பிரிட்டனில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செலவினங்கள் அதிகரிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலும் பிரிட்டனிலும் தனித்தனியே தலைமை அலுவலகங்கள் அமைக்க வேண்டியதிருக்கும்.
More From
-
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன?












Click it and Unblock the Notifications