தெருவில் பணம் கிடந்தால் எடுப்பேன், சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பேன்: பில் கேட்ஸ்
நியூயார்க்: தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை தான் நிச்சயம் எடுப்பேன் என்று உலக பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் ஏகப்பட்ட வருமானம் வருகிறது. அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்டவைகக்காக செலவு செய்து வருகிறார்.

இந்நிலையில் பில் கேட்ஸிடம் ஆன்லைனில் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியில் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை எடுப்பீர்களா என்று ஒருவர் பில் கேட்ஸிடம் ஆன்லைனில் கேட்டிருந்தார்.
அதற்கு பில் கேட்ஸ் அளித்த பதில் வருமாறு,
100 டாலர் நோட்டு தெருவில் கிடந்தால் அதை எடுத்து உரியவரிடம் கொடுக்க வேண்டும். பணத்தை தொலைத்தவர்கள் வருத்தத்தில் இருக்கலாம். ஆனால் நான் பணம் தெருவில் கிடப்பதை பார்த்தால் அதை எடுத்து பவுன்டேஷனுக்கு கொடுத்துவிடுவேன். ஏனென்னறால் 100 டாலரை வைத்து நிறைய பொருட்கள் வாங்கலாம் என்றார்.
பில் கேட்ஸ் தனது மனைவி மற்றும் தனது பெயரை சேர்த்து மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில், இரவு நேரத்தில் சாப்பிட்ட தட்டுகளை நானே கழுவி வைத்துவிடுவேன். அவ்வாறு செய்வது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. உங்களுக்கு மனநிறைவை அளிக்கும் விஷயங்களை நீங்கள் தாராளமாக செய்யுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications