”இனவெறிக்கு வழிகோலுகிறதா வாட்ஸப்?” - புதிய ஸ்மைலிகளால் குவியும் சர்ச்சை!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: வாட்ஸப்பில் புதிதாக வெளியாகியிருக்கின்ற ஸ்மைலிகள், புதிய சர்ச்சைக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளன.
வாட்ஸப்பில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் "யூத்" பயன்பாட்டில் அதிகம் உள்ளவை.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில், ஒவ்வொரு மனித முகமும் வெள்ளை, மாநிறம், கருப்பு என பல்வேறு கலர்களில் வந்துள்ளது. இதேதான் கையில் காட்டும் செய்கைகளுக்கும்.
இந்நிலையில் இந்த "ஸ்கின் டோன் அப்டேஷன்" தேவை தானா என்ற கேள்வி பல்வேறு தர்ப்பிலிருந்தும் பலமாக எழுந்துள்ளது.
இவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த அப்டேட், இளைஞர்கள் மத்தியில் இன வெறி செயல்களைத் தூண்டி விடக் கூடும் என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications