அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதியில் வெளியேற்றப்பட்ட நிருபர்கள்!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டு நிருபர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகையில், தினசரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கப்படுவது வழக்கம். இதற்காக பிரஸ் ரூம் ஒன்று உள்ளது. நேற்றும் அதேபோல பேட்டியளிக்கப்பட்டு வந்தது. அப்போது, அந்த அறையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பத்திரிகையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொலைபேசி அழைப்பு ஒன்றில் இந்த தகவல் வந்ததாக கூறப்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை நடத்தியபோதிலும், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, முதல் குடிமகள் மிட்சல் ஒபாமா ஆகியோர் அவர்களின் அறைகளில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications