எபோலா நோய் பலி எண்ணிக்கை 7,000 ஆக உயர்வு : உலக சுகாதார நிறுவனம் தகவல்!
லண்டன்: எபோலோ வைரஸ் நோய்க்கு இதுவரை சுமார் ஏழாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது எபோலா வைரஸ் நோய். இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்நோயின் தாக்கம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் இந்நோய் பரவியுள்ளது.

எபோலாவை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படாததால், இந்நோய் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், எபோலா நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்நோய்க்கு இதுவரை 6,928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிலும், குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் இந்த நோய் தாக்கி 1000 பேர் பலியாகி உள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
தற்போது லைபீரியாவில்தான் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு எபோலா நோய் தாக்கிய 7,244 பேரில் 4,181 பேர் இறந்துள்ளனர். சியாராலோனில் பாதிக்கப்பட்ட 6,802 பேரில் 1,463 பேரும், கினியாவில் 2,123 பேரில் 1,284 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது எபோலா நோய் தாக்கம் சியாராலோன் நாட்டில் அதிகம் உள்ளது. அதே நேரத்தில் லைபீரியாவில் குறைந்துள்ளது. கினியா, சியாராலோன் நாடுகளில் மட்டும் 16 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications