கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரும் சோதனையை நிறுத்தியது உலக சுகாதார அமைப்பு
குளோரோகுயின் மருந்து தரும் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனை ஏற்று இந்தியாவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் என பரிசீலிக்கப்பட்டது. அத்துடன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்தான் இப்போது தேவை என அமெரிக்காவும் அடம்பிடித்து இறக்குமதி செய்தது.
உலகின் பலநாடுகளும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் இருந்து பெற்று கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தன. இருப்பினும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் கொரோனா சிகிச்சையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இம்மருந்தை பயன்படுத்துவதை நிறுத்தின. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் லோபினாவிர், ரிடோனாவி ஆகிய மருந்துகளை கொடுப்பதையும் உலக சுகாதார அமைப்பு நிறுத்திவிட்டது.
உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான முயற்சிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயினுக்குப் பதிலாக வேறு மருந்துகளை பயன்படுத்தி சோதனை நடத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
-
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல












Click it and Unblock the Notifications