கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரும் சோதனையை நிறுத்தியது உலக சுகாதார அமைப்பு
குளோரோகுயின் மருந்து தரும் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனை ஏற்று இந்தியாவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் என பரிசீலிக்கப்பட்டது. அத்துடன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்தான் இப்போது தேவை என அமெரிக்காவும் அடம்பிடித்து இறக்குமதி செய்தது.
உலகின் பலநாடுகளும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் இருந்து பெற்று கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தன. இருப்பினும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் கொரோனா சிகிச்சையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இம்மருந்தை பயன்படுத்துவதை நிறுத்தின. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் லோபினாவிர், ரிடோனாவி ஆகிய மருந்துகளை கொடுப்பதையும் உலக சுகாதார அமைப்பு நிறுத்திவிட்டது.
உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான முயற்சிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயினுக்குப் பதிலாக வேறு மருந்துகளை பயன்படுத்தி சோதனை நடத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications