கொரோனா வைரஸின் 'பூர்வோத்திரம்'.. சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு
ஜெனிவா: கொரோனா வைரஸ் எப்படி உருவானது? எப்படி பரவ தொடங்கியது என்பது குறித்து ஆராய ஜனவரி மாதத்தில் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு செல்ல உள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,41,85,172. கொரோனாவால் உலகம் முழுவதும் 16,49,277 பேர் மாண்டு போயுள்ளனர்.
இத்தகைய கொடூர ஆட்கொல்லி நோயானா கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியது. இருப்பினும் உலக சுகாதார நிறுவனமானது உலக நாடுகளுக்கு போதுமான முன்னெச்சரிக்கைகளை செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு.
சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா - கட்டாய பிசிஆர் பரிசோதனை செய்ய அரசு உத்தரவு
இதனால் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மல்லுக்கட்டி இருந்தார். இருப்பினும் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலக சுகாதார நிறுவனம், பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தும் வந்தது.
இந்நிலையில் கொரோனாவின் தொடக்கம் என்ன என்பது தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச வல்லுநர் குழுவை உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு செல்ல உள்ளது. இந்த குழு ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்று ஆய்வு செய்யும்.