வடகொரியா...உணவுப் பஞ்சம்...இறைச்சியாகும் செல்லப்பிராணி நாய்கள்..கிம் ஜாங் உத்தரவு!!!
பயோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதால், வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை இறைச்சி தொழிற்சாலைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
Recommended Video
வடகொரியாவில் பெரிய அளவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவை ஒட்டிய வடகொரியா பகுதிகளில் கடந்த ஐந்து மாதங்களாக கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆதலால், வடகொரியா போன்ற நாடுகளில் விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்று ஐநா அமைப்பின் மனித உரிமை வல்லுநர் கோரிக்கை வைத்து இருந்தார்.

வடகொரியா அணு ஆயுத தயாரிப்பு நாடு என்பதால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 1990களின் மத்தியில் உணவுப் பஞ்சத்திற்கு மட்டும் 3 மில்லியன் மக்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்து இருக்கின்றனர் என்ற தகவலை இதுவரை வடகொரியா வெளியிடவில்லை.
கொரோனா தொற்று காரணமாக சீனாவுடனான வர்த்தகம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வடகொரியாவுக்கு 90% தடைபட்டு இருந்தது. வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது. பலரும் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உணவு சாப்பிடுகின்றனர். அல்லது சோளம் மட்டும் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். சிலர் பட்டினி கிடக்கின்றனர். இதனால், மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
இதன் வெளிப்பாடுதான் கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு என்று கூறப்படுகிறது. இதையடுத்தே, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை வலுக்கட்டாயமாக கொடுக்குமாறு வலியுறுத்தப்படுகின்றனர். அல்லது நாய்களை பறித்துச் செல்கின்றனர். இவ்வாறு பறிக்கப்படும் நாய்களை விலங்குகள் சரணாலயத்துக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து இறைச்சி கடைகளுக்கு விற்று விடுகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் கூறினாலும், வீட்டில் செல்லப் பிராணியாக நாய் வளர்ப்பது மேற்கத்திய கலாச்சாரம். இதை பறிக்கவே இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இது முதலாளித்துவ சித்தாந்தத்தில் கறைபடிந்த போக்கு என்று கிம் ஜாங் கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் சாதாரண மக்கள், பன்றி போன்றவற்றை வீட்டில் வளர்த்து வருகின்றனர். பணக்காரர்கள் மட்டுமே நாய் வளர்த்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
வடகொரியாவில் 60% மக்கள் அதாவது 25.5 மில்லியன் மக்கள் போதிய உணவு இன்றி இருப்பதாக சமீபத்திய ஐநா புள்ளியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெள்ளம் மற்றும் கொரோனா தொற்று இரண்டும் அந்த நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்திவிட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications