400 மடங்கு மழை.. உடைந்த அணைகள்- 10 அடி வெள்ளம்.. 20,000 பேர் பலி- லிபியா பேரழிவு- 10 பாயிண்டுகள்!
பெங்காசி: 21-ம் நூற்றாண்டின் பெருந்துயரமாக லிபியா பெருவெள்ளத்தில் சுமார் 20,000 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லிபியாவின் டேர்னா எனும் மாநகரையே பேய்மழை மயான பூமியாக்கிவிட்டிருக்கிறது.. மத்திய தரைக்கடல் இப்போது சடலங்களை தன்னுள் கொண்ட மனிதபுதை குழியாகி கிடக்கிறது.

லிபியா பேரழிவுக்கு என்ன காரணம்? 10 பாயிண்டுகள்:
1. 2011-ல் லிபியாவின் மக்கள் தலைவராக திகழ்ந்த கடாபி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இரு நாடுகளாக சிதறுண்டு போனது. இரு போட்டி அரசாங்கங்கள் நடைபெற்று வருகின்றன.
2. வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று டேனியல் புயல் சூறையாடியது. கனமழை கொட்டியது.
3. டேனியல் புயல் காரணமாக 24 மணி நேரத்தில் 400 மி.மீ (40 செ.மீ.) மழை கொட்டியது.
4. லிபியாவில் செப்டம்பர் மாதம் சராமரியாக வெறும் 1.5 மி.மீ மழைதான் பெய்யும். அதாவது 400 மடங்கு மழை அதிகமாக பெய்தது.
5. 400 மடங்கு கனமழை கொட்டியதால் வாதி டெர்னா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 2 அணைகள் உடைந்து ஒட்டுமொத்த ஆறும் பெரும் சுனாமியைப் போல டேர்னா நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
6. டேர்னாவில் 12 கி.மீ. தொலைவில் முதலில் இருந்த பலவீனமான அணை உடைந்தது. அந்த அணை நீர் மற்றொரு அணைக்குள் பாய்ந்து அந்த 2 அணைகள் ஒட்டுமொத்தமாக உடைந்து மொத்த தண்ணீரும் டேர்னா நகருக்குள் பாய்ந்தது.
7. 1,00.000 பேர் வசிக்கக் கூடிய டேர்னா நகரமே ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியது. டேர்னா நகரில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடியது.
8. டேர்னா மாநகரில் இவ்வளவு பெரிய பேய்மழையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 வரை இருக்கக் கூடும் என்கிறார் மேயர்.
9. வாதி டேர்னா ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உடல்கள் மத்திய தரைக்கடலுக்குள் புதையுண்டு போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
10. டேர்னாவில் அணைகள் இடிந்து விழுந்தது போர் விமானங்கள் பயங்கர சப்தங்களுடன் தாக்குதல் நடத்தியதைப் போல பூமியையே அதிரவைத்ததாக உயிர் தப்பியவர்கள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications