இந்தியா வர ஆசைதான்.. ஆனாலும் வர மாட்டேன்.. நீரவ் மோடி சொல்லும் வித்தியாசமான 3 காரணங்கள்!
தான் ஏன் இந்தியா வரவில்லை என்று நீரவ் மோடி மூன்று காரணங்கள் சொல்லி இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: தான் ஏன் இந்தியா வரவில்லை என்று நீரவ் மோடி மூன்று காரணங்கள் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் இவர் பேட்டி அளித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

சம்மன்
இந்த வழக்கில் நீரவ் மோடிக்கு மூன்று சம்மன் அனுப்பப்பட்டது. முதல் சம்மனுக்கு அவர் ''எனக்கு வெளிநாட்டில் வேலை இருக்கிறது'' என்று பதில் அளித்தார். இரண்டு சம்மனுக்கு பதில் அளிக்கவில்லை. தற்போது மூன்றாவது சம்மனில், இந்தியா வர முடியாது என்றுள்ளார்.

பாதுகாப்பு
இதற்கு முக்கிய காரணமாக ''எனக்கு என் பாதுகாப்பு முக்கியம். என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை இரவு 8 மணிக்கு மேல் கூட கைது செய்கிறார்கள். அவர்களுக்கே அப்படி என்றால் என் நிலைமை. நான் இந்தியா திரும்ப விருப்பப்படுகிறேன். ஆனால் அங்கு எனக்கு பாதுகாப்பு இல்லை'' என்றுள்ளார்.

அவமானம்
மேலும் ''என்னை ரொம்பவே அசிங்கப்படுத்திவிட்டார்கள். அரசியல்வாதிகள் என்னை பற்றி தவறுதலாக பேட்டியில் பேசுகிறார்கள். இதனால் என் வியாபாரம் ரொம்பவே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை'' என்றுள்ளார்.

காப்பாற்ற விருப்பம்
மேலும் ''வெளிநாட்டில் தனக்கு உதவி இருக்கும் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களை என்னால் கைவிட முடியாது. இங்கு எனக்கு சில வங்கிகள் கூட உதவி இருக்கிறது. அவர்களை என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியாது'' என்றுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications