இந்தியா வர ஆசைதான்.. ஆனாலும் வர மாட்டேன்.. நீரவ் மோடி சொல்லும் வித்தியாசமான 3 காரணங்கள்!
தான் ஏன் இந்தியா வரவில்லை என்று நீரவ் மோடி மூன்று காரணங்கள் சொல்லி இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: தான் ஏன் இந்தியா வரவில்லை என்று நீரவ் மோடி மூன்று காரணங்கள் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் இவர் பேட்டி அளித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.
அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

சம்மன்
இந்த வழக்கில் நீரவ் மோடிக்கு மூன்று சம்மன் அனுப்பப்பட்டது. முதல் சம்மனுக்கு அவர் ''எனக்கு வெளிநாட்டில் வேலை இருக்கிறது'' என்று பதில் அளித்தார். இரண்டு சம்மனுக்கு பதில் அளிக்கவில்லை. தற்போது மூன்றாவது சம்மனில், இந்தியா வர முடியாது என்றுள்ளார்.

பாதுகாப்பு
இதற்கு முக்கிய காரணமாக ''எனக்கு என் பாதுகாப்பு முக்கியம். என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை இரவு 8 மணிக்கு மேல் கூட கைது செய்கிறார்கள். அவர்களுக்கே அப்படி என்றால் என் நிலைமை. நான் இந்தியா திரும்ப விருப்பப்படுகிறேன். ஆனால் அங்கு எனக்கு பாதுகாப்பு இல்லை'' என்றுள்ளார்.

அவமானம்
மேலும் ''என்னை ரொம்பவே அசிங்கப்படுத்திவிட்டார்கள். அரசியல்வாதிகள் என்னை பற்றி தவறுதலாக பேட்டியில் பேசுகிறார்கள். இதனால் என் வியாபாரம் ரொம்பவே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை'' என்றுள்ளார்.

காப்பாற்ற விருப்பம்
மேலும் ''வெளிநாட்டில் தனக்கு உதவி இருக்கும் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களை என்னால் கைவிட முடியாது. இங்கு எனக்கு சில வங்கிகள் கூட உதவி இருக்கிறது. அவர்களை என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியாது'' என்றுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications