25 ஆண்டுகள் கழித்து மியான்மரில் ஜனநாயக முறைப்படியிலான முதல் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

யங்கூன்: 25 ஆண்டுகள் கழித்து மியான்மரில் ஜனநாயக முறைப்படி இன்று தேர்தல் நடந்து வருகிறது.

மியான்மரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் அண்மை காலமாக விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து ஜனநாயக முறைப்படி இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

664 தொகுதிகளை கொண்ட மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு உள்ள ஆளும் யு.டி.எஸ்.பி. கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவரான ஆங் சாங் சூ கியின் என்.எல்.டி. கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

With excitement and hope, millions vote in Myanmar polls

பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

தேர்தல் பற்றி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஜோபாய் என்கிற முஸ்லீம் கூறுகையில்,

நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளோம். நான் 53 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் பார்த்து எல்லாம் ராணுவ அதிகாரத்தை தான் என்றார்.

முன்னதாக 1990ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சாங் சூ கி வெற்றி பெற்றபோதிலும் அந்த முடிவை ஏற்க ராணுவம் மறுத்துவிட்டது. இதையடுத்து சூ கியை 20 ஆண்டு காலம் வீட்டு காவலில் வைத்தது ராணுவம். அவர் கடந்த 2010ம் ஆண்டு தான் விடுவிக்கப்பட்டார்.

இந்த தேர்தலில் சூ கியின் கட்சி வெற்று பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+