காதலியை பலாத்காரம் செய்வதை லைவ் செய்த காமுக காதலன்
லண்டன்: இங்கிலாந்தில், தனது காதலியை பலாத்காரம் செய்ததை அவருக்குத் தெரியாமலேயே லைட் செய்து வெறித்தனமாக நடந்துள்ளார் ஒரு காதலர்.
ஒரு சாட் தளத்தில் இதை அவர் லைவ் செய்துள்ளார். இந்த அடாத செயலால் கர்ப்பமுற்ற அப்பெண் மூளை வளர்ச்சியில்லாத குழந்தையைப் பெற்றுள்ளார்.
அப்பெண்ணின் பெயர் சமந்தா மில்லர். 35 வயதாகிறது. இவரைக் கொடுமைப்படுத்திய காதலர் பெயர் சீன் ஜான்ஸ்டன். 43 வயதாகும் இவர் பலமுறை சமந்தாவை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
ஒருமுறை தனது வீட்டுக்கு வரவழைத்து கத்தி முனையில் அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பாலியல் பலாத்காரம் செய்ததை சாட் சைட்டில் நேரடியாகவும் ஒலிபரப்பியுள்ளார். சமந்தாவின் அழுகை, கதறல் உள்ளிட்டவற்றை லைவ் செய்துள்ளார்.
அதன் பின்னர் சமந்தா கர்ப்பமுற்றபோது அவரது வயிற்றில் உதைத்துள்ளார். இதனால் அந்தக் குழந்தை மூளை வளர்ச்சியில்லாமல் பிறந்தது.
பின்னர் தனது வீட்டு நாயைக் கூட்டி வந்து அதனுடன் சமந்தாவை உறவு கொள்ளக் கூறி மிரட்டியுள்ளார். மறுத்தால் அவரைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இப்படி கடந்த 2 வருடமாக அக்கிரமம் செய்துள்ளார் சீன். அவரிடமிருந்து மீண்டு வந்த சமந்தா போலீஸில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சீன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்திலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications