பலாத்காரம் செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் லைவாக எழுதிய யு.எஸ். பெண்
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இடத்தில் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டதை அமெரிக்க பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் லைவாக எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஆம்பர் அமூர்(27). பலாத்காரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர். இந்நிலையில் பலாத்காரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு சென்றுள்ளார்.

அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் ஷகிர் என்பவருடன் சேர்ந்து குளிக்க சம்மதித்துள்ளார். குளியல் அறையில் வைத்து ஷகிர் ஆம்பரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் ஆம்பர் மயக்கம் அடைந்துள்ளார். கண் விழித்த அவர் தனக்கு நடந்த கொடுமையை நினைத்து அழுதுள்ளார்.
அழுதவர் தன்னை செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போட்டு குளியல் அறையில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை விரிவாக தெரிவித்துள்ளார். நிறுத்து நிறுத்து என்று நான் அவரை கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நிறுத்து நிறுத்து என்று கூறி நான் அழத் துவங்கினேன், பலாத்காரம் செய்யப்பட்டதில் நான் மயக்கம் ஆனேன்.

எனக்கு மயக்கம் தெளிந்த பிறகு வந்து அவர் என்னை ஷவரில் நிற்கவைத்து தடயத்தை அழித்துவிட்டார் என்று ஆம்பர் தெரிவித்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் அதை மறைக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications