அமெரிக்காவில் புயலின் போது பிறந்த குழந்தைக்கு ஹார்வே என பெயர் சூட்டிய தாய் #Harvey
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புயலின் போது பிறந்த குழந்தைக்கு ஹார்வே என அதன் தாய் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புயல் தாக்கியபோது பிறந்த குழந்தைக்கு அதன்ஹா தாய் ஹார்வே என பெயர் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் அதாவது சுமார் 130 மைல் வேகத்தில் ஹார்வே புயல் கரையை கடந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை தாக்கியுள்ள இந்தக் கடுமையான புயலால் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஆங்காங்கே வெள்ளக் காடாக காட்சியளித்தது. இந்நிலையில் டெக்சாஸை சேர்ந்த இர்மா ரோட்ரிகியூஸுக்கு புயலின் போது கார்பஸ் கிறிஸ்டி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
குழந்தையை பெற்றுக் கொள்ள மகப்பேறு அறைக்கு செல்லும் போது கூட தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. ஆனால் கடும் புயல் காற்றின்போது பிறந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் ஹார்வே என்ற பெயரையே வைக்க அறிவுறுத்தினர்.
அதன்படி குழந்தைக்கு ஹார்வே என்ற பெயர் சூட்டப்பட்டது. புயல் காற்றின் போது குழந்தை பிறந்தது மகிழ்ச்சியான தருணமாக உள்ளதாகவும், எனக்கு மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாகவும் பிரசவித்த பெண் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications