பஸ்ஸுக்காக காத்திருந்த இளம்பெண் பலாத்காரம்... கடந்து சென்ற கார்கள்... இது இங்கிலாந்தில்!
லண்டன்: பேருந்துக்காகக் காத்திருந்த 18 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இச்சம்பவம், ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப இந்தியா தடை செய்துள்ள நிலையில், மற்ற நாடுகளில் அது ஒளிபரப்பப் பட்டுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் சிட்டி சென்டரில் உள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக நேற்றிரவு 18 வயதுப் பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்தப் பெண்ணை அருகில் இருந்த புதருக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சம்பவம் நடந்த அந்த பேருந்து நிறுத்தம் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரின் மையப்பகுதி. எனவே, நிச்சயமாக அந்த சாலை வழியாக கடந்து சென்ற வாகனங்களில் பயணித்தவர்களுக்கு பலாத்கார சம்பவம் நடந்தது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனபோதும், அவர்கள் யாரும் அதைத் தட்டிக் கேட்க முன்வரவில்லை என அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
பின்னர் அப்பகுதியில் சென்ற வழிப்போக்கர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயக்க நிலையில் கிடந்த பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிறுத்தத்தில் கிடைத்த தடயங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications