9 வயதில் இருந்து பலாத்காரம்... இமெயில் மூலம் மாமாவை ஜெயிலுக்கு அனுப்பிய பெண் டாக்டர்
லண்டன்: பஞ்சாபை சேர்ந்த பெண் டாக்டர் இங்கிலாந்தில் இருந்து போலீசாருக்கு இமெயில் அனுப்பியதை அடுத்து அவரது மாமாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணி பாக் பகுதியை சேர்ந்தவர் சுக்வந்த் சிங் சித்து(60). 1980ம் ஆண்டு பிறந்த சித்துவின் சகோதரியின் மகள் படிப்புக்காக அவரது வீட்டில் தங்கியிருந்தார். சித்துவோ சகோதரியின் மகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

9 வயது சிறுமியாக இருக்கையில் இருந்து அவரை சித்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சித்துவின் சகோதரியின் மகள் எம்.பி.பி.எஸ். படித்து தற்போது இங்கிலாந்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
மாமா சித்து மீதான பயத்தால் இத்தனை ஆண்டுகளாக அவர் செய்த கொடுமைகள் பற்றி வாய் திறக்காத அவர் தற்போது இங்கிலாந்தில் இருந்து பஞ்சாப் மாநில ஐஜிக்கு இமெயில் மூலம் நடந்தது அனைத்தையும் தெரிவித்தார்.
அவரது இமெயிலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்துவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சித்துவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது அந்த பெண் இங்கிலாந்தில் இருந்து வந்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.












Click it and Unblock the Notifications