Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பாகிஸ்தான் வந்தால் எதிர்க்க மாட்டோம்.. வைதிக்கிடம் உறுதியளித் ஹபீஸ் சயீத்

Subscribe to Oneindia Tamil

லாகூர்: பத்திரிக்கையாளரும், ராம்தேவின் நண்பருமான வேத் பிரகாஷ் வைதிக், தன்னை வந்து சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வந்தால் அதை தனத அமைப்பு எதிர்க்காது என்று உறுதியளித்தாராம் ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்.

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை நிறுவியர்தான் இந்த சயீத். இந்த அமைப்புதான் தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் பாகிஸ்தானில் இயங்கி வருகிறது. 2008ல் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பத்து பேரை அனுப்பி கொலை வெறியாட்டம் போட்டதன் பின்னணியில் சயீத் இருக்கிறார்.

இந்த நிலையில், சயீத்தை பாகிஸ்தானுக்குப் போய் சந்தித்துப் பேசியுள்ளார் வைதிக். இதை நியாயம் கற்பித்துள்ளார் ராம்தேவும். இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மத்திய அரசு கூறுகிறது.

இந்த நிலையில் மோடி பாகிஸ்தான் வந்தால் அதை தனது அமைப்பு எதிர்க்காது என்று சயீத் வைதிக்கிடம் தெரிவித்தாராம்.

இதயப்பூர்வமாக சந்திக்கிறேன்

இதயப்பூர்வமாக சந்திக்கிறேன்

இதுகுறித்து சயீத் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் யாரையுமே இதயப்பூர்வமாகவே சந்திக்கிறேன். யார் வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை சந்திக்கலாம்.

இந்தியாவின் குறுகிய மனப்பான்மை

இந்தியாவின் குறுகிய மனப்பான்மை

இந்திய நாடாளுமன்றத்தில், என்னை ஒரு பத்திரிகையாளர் வந்து சந்தித்த விவகாரம் பரபரப்பான பிரச்சினையாக்கப்பட்டிருப்பது இந்திய அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. இது அவமானகரமானது. இதுதான் உண்மையான தீவிரவாதம்.

மோடி வருகையை எதிர்க்க மாட்டேன்

மோடி வருகையை எதிர்க்க மாட்டேன்

இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு வந்தால் நீங்கள் எதிர்ப்பீர்களா என்று வைதிக் என்னிடம் கேட்டபோது, அதுபோன்ற அரசியல் மற்றும் போராட்டங்களில் எனது அமைப்பு பங்கேற்காது என்று அவரிடம் தெரிவித்தேன்.

மும்பை தாக்குதல்

மும்பை தாக்குதல்

மும்பையில் நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களை எனது அமைப்பு நிராகரித்தது குறித்து வைதிக் என்னிடம் விவாதித்தார். அப்போது நான் ஏன் இந்தியா, பாகிஸ்தான் நீதிமன்றங்களை மதி்ப்பதில்லை என்று நான் அவரிடம் கேட்டேன் என்று சயீத் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+