தொட்டால் ‘கால்’ உணரும்... அசர வைக்கும் ஆஸ்திரிய விஞ்ஞானி!
வியன்னா: உலகிலேயே முதன்முறையாக உணர்ச்சியுள்ள செயற்கைக் கால்களை உருவாக்கி, சோதனை முறையில் வெற்றியும் பெற்றுள்ளார் ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானி.
வடக்கு ஆஸ்திரியாவில் உள்ள லின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹூபெர்ட் எக்கர் என்பவர் தான் இதனை உருவாக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு மனதின் கட்டளைப்படி இயங்கக் கூடிய செயற்கைக் கைகளை உருவாக்கி சாதனை புரிந்தவர். நியூட்ரான் மற்றும் மோட்டாரின் உதவி கொண்டு அந்த செயற்கைக் கைகளை அவர் உருவாக்கி இருந்தார்.

வரப்பிரசாதம்...
இந்நிலையில், தற்போது விபத்து அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் கால்களை இழந்தவர்களுக்கு உணர்ச்சியுடைய இந்தக் கால்களின் கண்டுபிடிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

சிமுலேட்டர்...
இந்த முறையின் படி, முதலில் துண்டிக்கப்பட்ட காலின் நரம்புகள் ஒன்று சேர்க்கப்படுகின்றன. பின்னர் அவை தொடைப்பகுதியில் உள்ள திசுக்களுடன் இணைக்கப்படுகின்றன. பின்னர் அவை செயற்கைக் காலில் உள்ள சிமுலேட்டருடன் இணைக்கப்படுகின்றன.

6 சென்சார்...
இந்த செயற்கைக் காலில் உணர்ச்சிகளைக் கடத்தக் கூடிய 6 சென்சார் மற்றும் சிமுலேட்டர் உள்ளது. அதன் மூலம் நல்ல நரம்புகளில் உள்ள உணர்ச்சிகள் சிமுலேட்டர் மூலம் கடத்தப்படுகின்றன.

மறுவாழ்வு..
கால்களை இழந்தவர்களுக்கு இந்த புதிய செயற்கைக் கால்கள் மறுபிறவி அளிப்பதாக கூறுகிறார் 54 வயதான உல்ப்ஹாங் ரேங்கர் என்ற ஆசிரியர். கடந்த 2007ம் ஆண்டு ஸ்ட்ரோக் ஏற்பட்டதன் காரணமாக தனது வலது காலை இழந்தவர் உல்ப். இவர் தற்போது இந்த உணார்ச்சியுள்ள செயற்கை கால்கள் மூலம் மீண்டும் தனது வாழ்க்கை புத்துணர்வு பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.

ஓடவும், நடக்கவும் முடியும்...
ஆறு மாத கால சோதனை மூலம் இந்த புதிய செயற்கைக் கால்களை எக்கர் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தரையில் உள்ள கல், மண் உள்ளிட்ட சின்னச் சின்னப் பொருட்களைக் கூட உணர முடிகிறது. இதனால், பயமின்றி ஓடவும், நடக்கவும், சைக்கிள் ஓட்டவும் முடிவதாக உல்ப் அனுபவப் பூர்வமாகக் கூறுகிறார்.

எளிமையான முறை...
எளிமையான முறையில் இந்த உணர்வுள்ள செயற்கைக் கால்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செயற்கைக் கால்களைத் தயாரிப்பதற்கு 10 ஆயிரம் யூரோவில் இருந்து, 30 யூரோ வரை செலவு ஆகிறதாம். அதாவது இந்திய மதிப்பில் 7 லட்ச ரூபாயில் இருந்து 21 லட்ச ரூபாய் ஆகும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications