சீனாவில் மலை உச்சியில் கண்ணாடி பாலம்: பார்த்தாலே கிறுகிறுக்குதே!
பெய்ஜிங்: சீனாவில் உள்ள சாங்கிங்கில் இருக்கும் மலை உச்சியில் குதிரையின் கால்குளம்பு வடிவில் கண்ணாடியிலான பாலம் கட்டப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது சாங்கிங் நகர். அந்த நகரில் இருக்கும் மலை உச்சியில் யுவான்த்வான் என்ற பெயரில் குதிரையின் கால்குளம்பு வடிவில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டு வந்தது.
அந்த பாலம் கட்டும் பணி முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கண்ணாடி பாலம்
மலை உச்சியின் முனையில் உள்ள கால்குளம்பு போன்ற பாலத்தின் தரை பகுதி கண்ணாடியால் ஆனது. பாலத்தில் நின்று கீழே பார்த்தாலும் சரி, கண்ணாடி வழியாக பார்த்தாலும் சரி பிரமித்து விடுவீர்கள். 2 ஆயிரத்து 350 அடி உயரத்தில் இருக்கும் அந்த பாலத்தில் நடப்பது காற்றில் நடப்பது போன்ற அனுபவத்தை தரும் என்று கூறப்படுகிறது.

திறப்பு விழா
பாலத்தின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். திறப்பு விழா அன்று சீன மாடல் அழகிகளின் அழகிய அணிவகுப்பு நடத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. யுவான்த்வான் பாலம் தான் மலை உச்சியில் மீது உள்ள கண்ணாடி நடைபாதைகளில் மிகவும் நீளமானது ஆகும்.

கட்டணம்
அந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை செல்லலாம். 30 நிமிடங்கள் அந்த பாலத்தில் நடக்க ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். மக்கள் அங்கிருந்து இயற்கை அழகை பார்த்து ரசிக்க ஏதுவாக ஒரு நேரத்தில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

நிலநடுக்கம்
குன்றின் உச்சியில் அதுவும் ஓரத்தில் உள்ள பாலம் என்று அஞ்ச வேண்டாம். ரிக்டர் அளவுகோலில் 8 அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளியையும் தாங்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications