அவசரமாக வெளியேற்றப்பட்ட 18,500 பேர்.. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட 2ம் உலகப் போர் பாம்!
ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெர்லின்: ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட பாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது உலக நாடுகளின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் இப்போதும் பல வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து இருக்கிறது. முக்கியமாக ஜெர்மனியில் அமெரிக்கா வீசிய சில குண்டுகள் இன்னும் வெடிக்காமல் உள்ளது.
அவ்வப்போது இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். இது மிகவும் ஆபத்தான குண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது
இந்த நிலையில் ஜெர்மனியில் பிராங்பார்ட் என்ற பகுதியில், பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கட்டிட பணி ஒன்றுக்காக குழி தோண்டிய போது, இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா ஜெர்மனி மீது வீசிய குண்டாகும். 70 வருடம் தாண்டியும் இந்த குண்டு இன்னும் வெடிக்காமல் உள்ளது.

எத்தனை பேர் வெளியேற்றம்
இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் எல்லோரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். அந்த பகுதியை சுற்றி மூன்று கிலோ மீட்டருக்கு இருக்கும் மக்கள் எல்லோரையும் வெளியேற்றினார்கள். மொத்தமாக 18,500 பேர் வெளியேற்றப்பட்டார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

அவசரமாக நடந்த பணி
அதன்பின் இந்த குண்டை தரையில் இருந்து எடுக்கும் பணி தொடங்கியது. இதன் எடை 500 கிலோ கிராம் ஆகும். இந்த குண்டு விமானத்தில் இருந்து வீசப்பட்டு இருக்கிறது. எதோ கோளாறு காரணமாக இந்த குண்டு வெடிக்காமல் போய் உள்ளது. இதனால் இதை அகற்ற வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்.

எத்தனை மணி நேரத்தில்
இந்த குண்டை செயலிழக்க செய்ய 2 மணி நேரம் ஆகியுள்ளது. நான்கு திறமையான வெடிகுண்டு நிபுணர்கள் இதை செயலலிக்க செய்தனர். 2 மணி நேரத்திற்கு பின் மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் ஜெர்மனியில் இன்னும் நிறைய வெடிகுண்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications