நேரம் வந்துவிட்டது.. வேகமாக நெருங்கும் பேரழிவு.. 2030க்கு நாள் குறித்த ஐநா!
2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

நியூயார்க்: 2030ல் உலகம் மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐநாவின் ''இன்டர்கவர்மெண்டல் பேனல் ஃபார் கிளைமேட் சேஞ்ச் (Intergovernmental Panel for Climate Change)'' அமைப்பு நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 400 பக்கம் உள்ள அந்த அறிக்கை, மனித குலத்திற்கே மிகப்பெரிய எச்சரிக்கை விடுக்க கூடியது.
மனிதர்கள் தற்போது இருக்கும் வாழ்க்கை முறையை கடைபிடித்தால், 2030ல் கண்டிப்பாக உலகம் நீரில் மூழ்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பூமியின் வெப்பநிலை வெகுவேகமாக உயரும் என்றும் கூறியுள்ளது.

இப்போது என்ன
கடந்த 10 வருடங்களில் பூமியின் வெப்பநிலை வேகமாக உயர்ந்துள்ளது. சரியாக 1 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயர்ந்து இருக்கிறது. இது இப்போதே உலகில் பல பனிப்பாறைகளை கரைத்துவிட்டது. இந்த நிலையில் இந்த வெப்பநிலை உயரும் வேகம் இன்னும் அதிகம் ஆகும். இது பெரிய பேரழிவிற்கு கொண்டு செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

2030ல் என்ன நடக்கும்
அதன்படி 2030ல் பூமியின் வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐநா கூறியுள்ளது. ஆம், 3.5 செல்ஸியஸ் என்பது உலகையே அழிக்க கூடிய அளவு வெப்பநிலை ஆகும். இது கண்டிப்பாக 2030க்குள் நடந்துவிடும். அதை தாண்டி போகாது அதற்குள், இந்த மோசமான அசம்பாவிதம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எதனால் இப்படி
தற்போது நாம் பயன்படுத்தும் கார், பைக் வெளியிடும் புகைகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 2020ல் நாம் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அப்படியே இரு மடங்கு ஆகும். இதன் காரணமாக புகையின் அளவும் அதிகம் ஆகும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் தொழிற்சாலை புகைகள் மூன்று மடங்காக உயரும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

என்ன நடக்க போகிறது
இதே வேகத்தில் வெப்பநிலை உயர்ந்தால், உலகில் உள்ள முக்கிய பனிப்பாறைகள் எல்லாம் அப்படியே மொத்தமாக உருகிவிடும். இதனால் உலகில் 8- 10 சதவிகிதம் மட்டுமே நிலம் இருக்கும். மற்ற பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் அரசுகள் உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
-
கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி.. அள்ளி வீசும் எடப்பாடி! அதிமுக 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதி -
Guru Peyarchi: 2026 இல் குருப்பெயர்ச்சி எப்போது?.. பொதுப் பலன்கள் முழு விவரம் இதோ -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கல்யாணத்தை நிறுத்திய பாட்டி.. மீனா கொடுத்த ஐடியா, மயிலுக்கு இரட்டை சந்தோசம்! -
கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி முதல் கருணைத் தொகை வரை! அதிமுக கொடுத்த 17 வாக்குறுதிகள் யாவை? -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணியால் வீட்டை விட்டு போகும் மீனா.. முத்து பிடித்த பாயிண்ட்! அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி -
திமுக கொடுத்த 'ஃபைனல் ஆஃபர்'.. கேட்டதும் அப்படியே ஸ்டன் ஆகி நின்ற ஓபிஎஸ்.. இது நடந்தால் செம ட்விஸ்ட் -
திலக், ரிங்கு, வாஷிங்டன் சுந்தர்.. உள்ளே வரும் சஞ்சு சாம்சன்.. இந்திய XIல் கம்பீர் செய்யும் மாற்றம்! -
மின்சார வாரியம் குட் நியூஸ்! காலி இடத்தை வாடகைக்கு விட்டு லட்சங்களில் சம்பாதிக்கலாம்! மெகா கொள்முதல் -
டிரம்ப் எடுத்த முடிவால் வளர்ந்த உலக போதை பொருள் தலைவர்.. எல் மென்சோ சாம்ராஜ்ஜியம் உருவானது எப்படி? -
பிரபல மருத்துவமனைகளுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தந்த பெரிய பாடம்.. மருத்துவர்கள் அறிய வேண்டியது -
கன்னியாகுமரியின் அடையாளம் மாறுகிறது! திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவை திறந்து வைக்கிறார் முதல்வர் -
தேனி வரலாற்றில் பெரிய குட்நியூஸ்.. சத்தமே இல்லாமல் தமிழக அரசு சம்பவம்.. களம் இறங்கும் கேரள நிறுவனம்












Click it and Unblock the Notifications