12 வயது சிறுமியை கதறக் கதற பலாத்காரம் செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்
ராக்கா: 12 வயது சிறுமியை தீவிரவாதிகள் கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்ததை தன்னால் மறக்க முடியாது என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பியுள்ள 18 வயது பெண் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 18 வயது அமல் என்ற பெண் தப்பி வந்துள்ளார்.
அவர் தீவிரவாதிகள் பிடியில் அனுபவித்த கொடுமைகள் பற்றி கூறுகையில்,
கடத்தல்
கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நான் உள்பட எனது குடும்பத்தார் 14 பேரை சிஞ்சாருக்கு கடத்திச் சென்றனர். அங்கிருந்து தால் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
கொலைகள்
என்னை என் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்துவிட்டனர். சிஞ்சாரில் தீவிரவாதிகள் பலரை கொலை செய்தனர். சாலையோரங்கள் எல்லாம் பிணங்களாக கிடந்ததை என்னால் மறக்கவே முடியாது.
பலாத்காரம்
சிஞ்சாரில் தீவிரவாதிகள் 12 வயது சிறுமியை ஈவு இரக்கமில்லாமல் கதறக் கதற பலாத்காரம் செய்தனர். அந்த கொடுமையை என்னால் மறக்கவே முடியாது என்றார் அமல்.
மிளகுப்பொடி
28 வயது ரூபாவை தீவிரவாதிகள் கடத்தி 40 வயது நபருக்கு விற்றுவிட்டனர். ரூபாவின் 3 வயது அக்கா மகளுக்கு அரபு மொழி பேசத் தெரியவில்லை என்று அந்த 40 வயது நபரின் மனைவி குழந்தையின் வாயில் மிளகுப் பொடியை போட்டு நீர் கொடுக்காமல் ஒரு அறையில் பூட்டியுள்ளார்.