என் கணக்குப்படி பாஜகவுக்கு 300 சீட் கிடைக்கலாம்.. சிகாகோவிலிருந்து ராம்தேவ் தகவல்

இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2014 பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும். 100 சதவீதம் இது உறுதியானது. மோடி தலைமையில்தான் பாஜக ஆட்சி அமையும்.
இந்தியா, ஒரு புரட்சிக்கும், மாற்றத்திற்கும் தயாராகி விட்டது. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 100 இடங்கள்தான் கிடைக்கும். பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் 250 முதல் 300 இடங்கள் வரை கிடைக்கும்.
இந்திய அரசியல் வரலாற்றில் 2014ம் ஆண்டு புதிய வரலாறு படைக்கும் என்றார் ராம்தேவ்.
சரி, ஹீத்ரு விமான நிலையத்தில் உங்களைத் தடுத்து வைத்து விசாரித்தார்களே என்ற கேள்விக்கு, என்னை அந்நிய மண்ணில் வைத்துக் கைது செய்ய மத்திய அரசு முயல்கிறது. அந்த சதியின் ஒரு பகுதிதான் இது என்றார் அவர்.
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நாள் சிகாகோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பதற்காகவே ராம்தேவ் இங்கு வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications