"இரத்தக்களரியை பார்ப்பீர்கள்.. சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது".. ஜின்பிங் "ஓபன் டாக்".. பரபர சவால்
பெய்ஜிங்: சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது.. என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மிக வலிமையான உரையை தன் நாட்டு மக்கள் முன்னிலையில் நிகழ்த்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தனது உரையின் மூலம் நேரடி சவாலை அவர் விடுத்துள்ளார்.
Recommended Video
உலக நாடுகள் எல்லாம் கொரோனா காரணமாக முடங்கி உள்ளது. இந்தியா மூன்றாம் அலையை எதிர்நோக்கி அச்சத்தோடு உள்ளது, பிரான்ஸ் போன்ற நாடுகள் நான்காம் அலைக்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது, கொரோனா காரணமாக வரலாற்றில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா எதிர்கொண்டு உள்ளது.
உலக நாடுகள் எல்லாம் இப்படி விக்கித்து போய் இருக்கும் நிலையில், கொரோனா முதலில் பரவிய சீனா மட்டும் நேற்று மிக விமரிசையான நூற்றாண்டு கொண்டாட்டங்களை மேற்கொண்டது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 1000 ஆண்டுகள் முடிந்ததை அடுத்து அந்த நாடு நேற்று விழாக்கோலம் பூண்டது.

கொண்டாட்டம்
1921 ஜூன் மாதம் சீனாவின் ஷாங்காய் பகுதியில் மாவோ மற்றும் மற்ற சில மார்க்சிஸ் லெனினிஸ்ட் கொள்கை கொண்டவர்கள் சேர்ந்து உருவாக்கிய கட்சிதான் சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி. அதன்பின் கடந்த 100 வருடங்களாக பல போராட்டங்கள், போர்கள், சுதந்திர போராட்டம், மோதல்கள், சர்வதேச அழுத்தங்கள், வறுமை, சதி என்று பல எதிர்ப்புகளை கடந்து, உலகின் மிக வலிமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்துள்ளது.
.

பேச்சு
இந்த நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை அந்த நாடு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஒரு நாள் கொண்டாட்டமாக இல்லாமல் அடுத்த சில வாரங்களுக்கு கொண்டாடும் வகையில் சீனாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தியான்மென் சதுக்கத்தில் மாவோவின் பிரம்மாண்ட புகைப்படம் முன் நின்று உரை நிகழ்த்தி, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்

தொடக்கம்
சுதந்திரத்திற்கு பின் சீனாவின் முதல் சுதந்திர பிரகடனம் இதே இடத்தில்தான் 1949ல் வாசிக்கப்பட்டது. அதே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நின்று நேற்று ஜி ஜின்பிங் மாவோவின் உடையில், உரை நிகழ்த்தினார். ஜி ஜின்பிங் தனது உரையில், சீனா பல சவால்களை கடந்து உலகின் வலுவான நாடாக உருவெடுத்து இருக்கிறது. மிகப்பெரிய அடிமை நாடாக இருந்த நாம் சங்கிலியை உடைத்து உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்து இருக்கிறோம்.

சீனாவின் காலம்
இது சீனாவின் காலம். சீனாவின் சகாப்தம் தொடங்கி விட்டது. சீனாவை ஆட்டிப்படைக்கலாம், கொடுமை படுத்தலாம், சீனாவை கட்டுப்படுத்தலாம் என்று நினைத்ததவர்களின் காலம் முடிந்துவிட்டது. அவர்களின் காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. சீனாவில் ஒவ்வொரு மக்களும் வளத்துடனும், செல்வ செழிப்புடனும் முன்னேறி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள்
வறுமையில் இருந்த பல கோடி மக்கள், வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். சீனாவின் வளர்ச்சி உலகத்தையே மாற்றி உள்ளது. உலக நாடுகளை சீனா திரும்பி பார்க்க வைத்துள்ளது. சீனாவின் கட்டமைப்பு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. பல போர்களை, வறுமையை, வெளிநாட்டு சதிகளை நாம் கடந்து வந்து இருக்கிறோம்.

மாற்றம்
வரலாற்றில் மாற்றவே முடியாத புரட்சிகளை சீனா செய்து வருகிறது. உலக வரலாற்றில் சீனா முக்கிய இடம் பிடிக்க போகிறது. சீனாவின் பொருளாதாரம் புதிய உயரம் தொட்டுள்ளது. சீனாவின் எல்லைகளை காக்கும் ராணுவம் உலகத்தரம் வாய்ந்ததாக கட்டமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் சாலைகள் மிளிர்கின்றன. சீன மக்கள் உற்சாகமாக உள்ளனர்.

வெளிநாட்டு
சீன மக்கள் என்று வெளிநாட்டு சக்திகளை நாட்டிற்குள் விட மாட்டார்கள். எங்களை அடிமைப்படுத்தவும், எங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், எங்களை தாக்கவும் நாங்கள் என்றும் அனுமதிக்க மாட்டோம். சீனாவின் இரும்பு சுவர்களை தாக்க வேண்டும் என்றால் 1.4 பில்லியன் மக்களை நீங்கள் தாண்டி வர வேண்டும், எங்களை அடிமைப்படுத்த நினைத்தால் நீங்கள் பெரிய இரத்தக்களரியை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.. என்று சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கையை விடுக்கும் வகையில் ஜி ஜின்பிங் பேசி உள்ளார்.

பேச்சு
கொரோனா பரவலுக்கு பின் சீனா உலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்றும் சில நாடுகள் நினைக்கின்றன. உலக அளவில் சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் சர்வதேச அளவில் உலக நாடுகளை சீண்டும் விதமாக ஜி ஜின்பிங் பேச்சு அமைந்துள்ளது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications