Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 வயது வாலிபருக்கு லாட்டரியில் அடித்த ரூ. 80 கோடி.. மறுநாளே அவர் செய்த காரியம்தான்.. சபாஷ்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: கஷ்டப்பட்டு வறுமை நிலையில் இருந்தாலும் கூட திடீரென லாட்டரியில் பல கோடி ரூபாய் பணம் அடித்து விட்டால் பலரும் தலைகால் புரியாமல் மாறிவிடுவார்கள். நாமதான் கோடீஸ்வர் ஆயிட்டோமே.. இனி பழசை எல்லாம் நினைக்க கூடாது என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் லாட்டரியில் 80 கோடி ரூபாய் பணம் அடித்த போதும் கூட, வடிகால்களை பராமரிக்கும் பணியை தொடர்ந்து செய்கிறார் இளைஞர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சூர்ய வம்சம் சரத்குமார் போல ஒரே பாட்டில் ஒஹோ என ஆக வேண்டும் என்றால் லாட்டரியில் பணம் அடித்தால்தான் உண்டு என சொல்வதை கேள்வி பட்டு இருப்போம். லாட்டரியில் பணம் அடித்தவர்களை விட அதில் பணத்தை விட்டவர்கள்தான் அதிகம் என்றாலும் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் உச்சியில் கொண்டு விட்டு விடுகிறது.

lottery lottery prize weird


கிறிஸ்துமஸ் நேஷனல் லாட்டரி

கை செலவுக்கு கூட பணம் இல்லாத சிலர் கூட திடீரென லாட்டரியில் பணம் அடித்து பல கோடிக்கு அதிபதியாகி விடுகிறார்கள். இந்தியாவில் கூட சில நேரங்களில் இத்தகைய நிகழ்வுகளை பார்க்க முடியும். பொதுவாக லாட்டரியில் பணம் அடித்துவிட்டால், இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு வேலை செய்தது போதும்.. இனி வேறு எதாவது இந்த பணத்தை வைத்து செய்யலாம் என்று நினைப்பார்கள். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதே ஆன இளைஞர் ஒருவருக்கு லாட்டரியில் 80 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால், மறுநாளே அவர் செய்ததுதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் கார்லிஸில் கிளர்க்சன்( வயது 20). கேஸ் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவருக்கு லோட்டோ ஜாக்பாட் லாட்டரி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. அவ்வப்போது சிறிய தொகையை வென்று வந்து இருக்கிறார். சமீபத்தில் கூட கிறிஸ்துமஸ் நேஷனல் லாட்டரியில் 120 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 12,676) பரிசுத்தொகை கிடைத்தது. சிறிய தொகை என்பதால் பரிசாக கிடைத்த முழு பணத்திற்கும் லாட்டரியை வாங்கியிருக்கிறார். இதில்தான் அவரது தலைவிதியே மாறிவிட்டது.

ரூ.79.58 கோடி லாட்டரி பரிசு

ஆமாம், இவருக்கு 7.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.79.58 கோடி) ஜாக்பாட் அடித்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை விழுந்த போதும் கூட பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மறுநாளே தனது வழக்கமான பணிக்கு சென்று இருக்கிறார். வடிகால்களில் அடைப்பு இருந்தால் அதை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வரும் இவர்.. கோடீஸ்வரர் ஆன போதும் கூட மறுநாளே தனது வேலைக்கு சென்று விட்டார்.

எந்த பந்தா, சலனம் கட்டாமல்

இவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் பரிசாக விழுந்தாலும் கூட எந்த பந்தா, சலனம் கட்டாமல் பணியை செய்ய சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து கிளர்க்சன் கூறுகையில், “நான் எனது பெண் தோழி வீட்டில் இருந்தேன். அன்றைய தினம் காலையிலேயே விழித்துவிட்டதால் குளிர் எப்படி இருக்கிறது என பார்க்க வெளியே சென்றேன். அப்போது எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றும் வந்தது. அதில் நேஷனல் லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறப்பட்டு இருந்தது. முதலில் இதை நான் நம்பவே இல்லை.

ஒருவேளை கனவுதான் வந்து இருக்கிறது போல என முதலில் நினைத்தேன். உடனடியாக எனது தந்தைக்குக் போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவரும் வீட்டுக்கு வா.. பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். வீட்டிற்கு போனதும் எனது சகோதரர், தந்தை என அனைவரும் எப்போது 9 மணி ஆகும் என காத்திருந்தோம். லாட்டரி அலுவலகம் திறந்ததும் போன் செய்து வின்னிங் நம்பரை உறுதி செய்து கொண்டோம். எனக்குத்தான் பரிசு விழுந்துள்ளது என்பதை உணர்ந்ததும் பயித்தியம் பிடித்தது போல கத்தினேன்.

வேலை செய்வதை நிறுத்த மாட்டேன்

எங்கள் வீட்டில் அனைவருமே இப்போது இந்த லாட்டரியில் விழுந்த பரிசு பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய குடும்பம் பெரியது. அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது” என்றார்.. இவ்வளவு தொகை பரிசாக விழுந்தாலும் கூட, தனது வழக்கமான பராமரிப்பு பணிகளுக்கு செல்ல தொடங்கிவிட்டாராம். இது குறித்து அவர் கூறுகையில், ’பனிக்கட்டிகள் அடைத்துள்ள வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. நான் வேலை செய்வதை நிறுத்த போவது இல்லை’ என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+