Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யா வீரர்களால் பலாத்கார பயம்! முடியை குட்டையாக வெட்டி.. ஆண் போல் காட்சியளிக்கும் உக்ரைன் பெண்கள்!

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரேனிய நகரமான இவான்கீவ்வில் வசிக்கும் இளம் பெண்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்வதைத் தவிர்ப்பதற்காக தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டி ஆண்கள் போல காட்சியளிப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து 44 நாட்களாகி விட்ட நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி உக்ரைன் படைகளின் தீரமிக்க எதிர் தாக்குதலால் இதுவரை நிறைவேறவில்லை.

ரஷ்யாவின் போர் விதிகளை மீறிய செயலால் எனது நாடு அமைதியை இழந்திருப்பதாகவும், மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில் ,குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் கொல்லப்படுவதாக உக்ரை அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ள கிராமஸ்டோர்க் ரெயில் நிலையம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் மக்களை வெளியேற்ற உதவும் முக்கிய தளமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிராமஸ்டோர்க் ரெயில் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது என வெளியுறவுக் கொள்கை தலைவர் பரெல் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

இதேபோல் உக்ரைனின் புச்சா நகரை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். தற்போது போரோடியங்காவில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். மேலும் உலக நாடுகள் உக்ரைனுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்


இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக உக்ரேனிய பெண்கள் தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைநகர் கீவில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள உக்ரேனிய நகரமான இவான்கிவ்வில், இளம் பெண்கள் தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டி, 'கவர்ச்சிக்குறைவாக' இருப்பதற்காகவும், ரஷ்யப் படைவீரர்களை ஆக்கிரமிப்பதன் மூலம் பாலியல் பலாத்காரம் செய்வதைத் தவிர்த்தார்கள் என நகர துணை மேயர் மேரினா பெஷாஸ்ட்னா தெரிவித்தார்.

பெண்கள் நிலை

பெண்கள் நிலை

ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நகரம் மார்ச் 30 அன்று விடுவிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு காலத்தில், பெண்கள் தங்கள் தலைமுடியை அடியோடு ஆண்கள் போல் வெட்டியதால் பாதுகாக்கப்பட்டனர். அதனால் ரஷ்ய வீரர்கள் அவர்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று துணை மேயர் மேரினா பெஷாஸ்ட்னா கூறினார்.பெண்கள் கவர்ச்சியாக இல்லாமல் இருப்பதை காட்ட தங்கள் தலைமுடியை குட்டையாக வெட்ட ஆரம்பித்தனர், எனவே யாரும் அவர்களை இனி பார்க்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். இதுகுறித்து ஐடிவி செய்தியிடம் பேசிய அவர், அருகிலுள்ள கிராமத்தில் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சகோதரிகள் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை விவரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+