ரஷ்யா வீரர்களால் பலாத்கார பயம்! முடியை குட்டையாக வெட்டி.. ஆண் போல் காட்சியளிக்கும் உக்ரைன் பெண்கள்!
கீவ் : உக்ரேனிய நகரமான இவான்கீவ்வில் வசிக்கும் இளம் பெண்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்வதைத் தவிர்ப்பதற்காக தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டி ஆண்கள் போல காட்சியளிப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்து 44 நாட்களாகி விட்ட நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷ்ய படைகளின் முயற்சி உக்ரைன் படைகளின் தீரமிக்க எதிர் தாக்குதலால் இதுவரை நிறைவேறவில்லை.
ரஷ்யாவின் போர் விதிகளை மீறிய செயலால் எனது நாடு அமைதியை இழந்திருப்பதாகவும், மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் நிலையில் ,குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் கொல்லப்படுவதாக உக்ரை அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் போர்
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ள கிராமஸ்டோர்க் ரெயில் நிலையம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் மக்களை வெளியேற்ற உதவும் முக்கிய தளமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிராமஸ்டோர்க் ரெயில் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது என வெளியுறவுக் கொள்கை தலைவர் பரெல் தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசம்
இதேபோல் உக்ரைனின் புச்சா நகரை விட போரோடியங்காவில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக உள்ளது என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். தற்போது போரோடியங்காவில் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணிகள் துவங்கியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். மேலும் உலக நாடுகள் உக்ரைனுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக உக்ரேனிய பெண்கள் தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தலைநகர் கீவில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள உக்ரேனிய நகரமான இவான்கிவ்வில், இளம் பெண்கள் தங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டி, 'கவர்ச்சிக்குறைவாக' இருப்பதற்காகவும், ரஷ்யப் படைவீரர்களை ஆக்கிரமிப்பதன் மூலம் பாலியல் பலாத்காரம் செய்வதைத் தவிர்த்தார்கள் என நகர துணை மேயர் மேரினா பெஷாஸ்ட்னா தெரிவித்தார்.

பெண்கள் நிலை
ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நகரம் மார்ச் 30 அன்று விடுவிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு காலத்தில், பெண்கள் தங்கள் தலைமுடியை அடியோடு ஆண்கள் போல் வெட்டியதால் பாதுகாக்கப்பட்டனர். அதனால் ரஷ்ய வீரர்கள் அவர்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று துணை மேயர் மேரினா பெஷாஸ்ட்னா கூறினார்.பெண்கள் கவர்ச்சியாக இல்லாமல் இருப்பதை காட்ட தங்கள் தலைமுடியை குட்டையாக வெட்ட ஆரம்பித்தனர், எனவே யாரும் அவர்களை இனி பார்க்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். இதுகுறித்து ஐடிவி செய்தியிடம் பேசிய அவர், அருகிலுள்ள கிராமத்தில் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சகோதரிகள் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை விவரித்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications