சிகரெட் திருடியதை தட்டிக் கேட்ட தந்தையைக் குத்திக் கொன்ற மகன் கைது
Subscribe to Oneindia Tamil
அபுஜா: ஒரு சிகரெட்டுக்காக தனது தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 25 வயது மகனை நைஜீரிய போலீசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவின் எடோ மாநிலத்தில் உள்ள எட்சக்கோ பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மோமோடு. சம்பவத்தன்று இவர் தனது தந்தையின் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றைத் திருடியுள்ளார்.
மகனின் திருட்டைக் கண்டுபிடித்த தந்தை இது தொடர்பாக மகனைத் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதில் ஆத்திரமடைந்த மோமோடு, தனது தந்தையைக் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவானார்.
இதில் படுகாயமடைந்த தந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மோமோடுவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஒரே ஒரு சிகரெட்டிற்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications