சீனா ₹6.7 லட்சம் கோடி இழப்பீடு தருமா? மொத்த ஆப்பிரிக்காவையும் திரும்பி பார்க்க வைத்த ஜாம்பியா மக்கள்
லூசாகா: ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சீனா கடன் கொடுத்து அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வேண்டிய கனிமங்களை எடுத்துக்கொள்கிறது. அதேபோல் அந்த நாட்டில் தனது பொருட்களையும் விற்கிறது. அப்படித்தான் ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சுரங்க நிறுவனம் ஒன்று அங்குள்ள பகுதியை குத்தகைக்கு எடுத்து சுரங்கம் தோண்டி வருகிறது. அந்த நிறுவனத்திற்கு எதிராக சுமார் ₹6.7 லட்சம் கோடி நஷ்டஈடு கோரி அந்த மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏழை நாடுகளில் உள்ள வளங்களை அதிகப்படியான கடன் கொடுத்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பணக்கார நாடுகள், தங்களுக்கு வேண்டியவரை அதிகாரத்தில் அமர வைத்து, அனைத்து வளங்களையும் தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளும். அப்படித்தான் சீனாவும் பல்வேறு நாளுக்கு கடன் கொடுப்பதுடன், உள்கட்டமைப்பு மேம்படுத்துவதாக கூறி, வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டு வருகிறது.

சீனா ஜாம்பியாவில் முதலீடு
அப்படித்தான் ஜாம்பியாவில் சுரங்கத் தொழிலிலும், உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் சீனா முதலீடுகள் செய்திருக்கிறது. சீனாவின் "பெல்ட் அண்ட் ரோடு" திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜாம்பியாவில் சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை சீனா உருவாக்கி வருகிறது. ஏழை நாடான ஜாம்பியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா உதவி செய்வதாக பலர் நினைத்தாலும், ஜாம்பியாவை கடன் வலையில் சிக்க வைக்கக்கூடும் என்றே விமர்சனங்கள் உள்ளன. மேலும், சீன நிறுவனங்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி ஒரு விஷயம் தான் இப்போது பார்க்க போகிறோம்.
விவசாயிகள் வழக்கு
ஜாம்பியா நாட்டில் உள்ள விவசாயிகள் இரண்டு சீன நிறுவனங்கள் மீது $80 பில்லியன் (சுமார் ₹6.7 லட்சம் கோடி) நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கு ஜாம்பியா வரலாற்றிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் வழக்கு ஆகும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300,000 குடும்பங்கள் இந்த வழக்கில் வென்றால் பயனடைவார்கள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், ஜாம்பியாவின் தாமிரச் சுரங்கப் பகுதியில் (சீன நிறுவனம் நடத்திய வருகிறது) உள்ள ஒரு கழிவு அணை உடைந்தன் காரணமாக பல மில்லியன் லிட்டர் நச்சுத் தன்மையுடைய அமிலக் கழிவுகள் நீர்வழிகளில் கலந்துவிடட்து . இந்தக் கழிவுகளால் ஏராளமான மீன்கள் செத்தன, குடிநீர் மாசுபட்டது, விவசாயப் பயிர்கள் அழிந்து போய்விட்டது. மக்கள் சிறுநீரில் ரத்தம் வருவது, நெஞ்சு இறுக்கம் போன்ற உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் வழக்கு
இதனால் கொதித்து போன அந்த பகுதி மக்கள், சீன அரசு நிறுவனங்களின் துணை நிறுவனங்களான சினோ மெட்டல்ஸ் லீச் ஜாம்பியா மற்றும் என்.எஃப்.சி ஆப்பிரிக்கா மைனிங் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில், அணை உடைந்ததற்கு பொறியியல் மற்றும் கட்டுமான குறைபாடுகள் பற்றியும், நிர்வாகச் சீர்கேடு பற்றியும் கூறியுள்ளனர்.
சீன நிறுவனம் பதில்
இதற்கு சம்பந்தப்பட்ட சினோ மெட்டல்ஸ் நிறுவனம் எதுவும் பதில் அளிக்கவில்லை. அதேநேரம் சீன நிறுவனம் கழிவுநீர் கலந்து பற்றி வெளியிட்ட பதிவில், சுமார் 50,000 கன மீட்டர் கழிவுகள் கசிந்தது என்றும், அது சில மணி நேரங்களிலேயே கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்றும் கூறியது. ஆனால் அதனை ஏற்காத மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்கா எச்சரிக்கை
இதனிடையே அமெரிக்கத் தூதரம் இதுபற்றி எச்சரிக்கையும் விடுத்தது. இதன்படி. அணை உடைந்த இடத்திலிருந்து காற்று வழியாகவும் நச்சுப் பொருட்கள் பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறி, தமது ஊழியர்களை அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிட்டது. இதனிடையே இதுபற்றி ஜாம்பியா அரசு அளித்த பதிலில், பாளர், சுகாதார அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும், "அச்சப்படத் தேவையில்லை" என்றும் கூறியது.
80 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு
எனினும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சுற்றுச்சூழல் சீரமைப்பு மற்றும் முழு இழப்பீட்டிற்காக" $80 பில்லியனை ஜாம்பியா அரசு நிர்வகிக்கும் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக $20 மில்லியன் அவசரகால நிதியை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சுமார் 7 லட்சம் கோடி அளவிற்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications