திரும்பவும் நேட்டோவை தூக்கி கொண்டு வரும் ஜெலன்ஸ்கி! பதவி விலக டிமாண்ட் இதுதானாம்!
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போரை நடத்துவதற்கு முக்கிய காரணமே நேட்டோதான். இந்நிலையில், தான் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனில், உக்ரைன் நேட்டோவில இணைய வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்த தொடங்கியுள்ளார்.
ஜெலன்ஸ்கிக்கு உக்ரைன் மக்கள் மத்தியில் செல்வாக்கு போய்விட்டது. தேர்தலை நடத்த தயாராக இல்லை. எனவேதான் போரை காரணம் காட்டி தப்பித்து வருகிறார் என்று டிரம்ப் காட்டமாக விமர்சித்திருந்தார்.

போருக்கு நேட்டோதான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், நேட்டோ என்றால் என்ன? அதை ஏன் ரஷ்யா எதிர்க்கிறது? உள்ளிட்ட விஷயங்களை தெரிந்துக்கொள்வது முக்கியமாகும். அதற்கு முன்னர் ஜெலன்ஸ்கி பேசியதை பார்த்து விடுவோம்.
"உக்ரைனில் அமைதி ஏற்பட வேண்டும் என்றும், நான் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். எங்கள் நிலைப்பாட்டை புரிந்துக்கொண்டு, ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக அமெரிக்கா எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்கா எங்களுக்கு நட்பு நாடாக இருக்க வேண்டும். ரஷ்யாவுக்கு அல்ல" என்று கூறியுள்ளார்.
சோவியத் ரஷ்யா காலத்தில் அந்நாட்டுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஐரோப்பிய நாடுகள் இணைத்துக் கொண்டு ஒரு பெரும் படையாக நேட்டோ உருவானது. ஆனால் சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் நேட்டோ கலைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சோவியத் ரஷ்யாவின் முன்னாள் நாடுகளை நேட்டோ இணைத்துக் கொண்டது. அப்படித்தான் உக்கரனுக்கும் நேட்டா வந்தது.
உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடு அதாவது இந்தியா வங்கதேசம் போல. அமெரிக்கா ஆதரவுடன் உக்ரைன் தேர்தலில் அதிபராக ஜெயித்த ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஏனெனில் நேட்டோவில் உக்ரைன் இணைந்து விட்டால் அந்நாட்டு எல்லையில் நேட்டோ படைகள் நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடியான அச்சுறுத்தல். எனவே ஜெலன்ஸ்கியின் இந்த முடிவு குறித்து ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இருப்பினும் உக்ரைன் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா விருப்பம் தெரிவித்தாலும், உக்ரைன் அதற்கு முன்வரவில்லை. காரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனின் சப்போர்ட் தான். பைடன் ஏராளமான உதவியை உக்ரைனுக்கு செய்தார். எனவேதான் போரில் உக்ரைனால் இன்று வரை தாக்கு பிடிக்க முடிந்திருக்கிறது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய அதிபரான டிரம்ப், ஜெலன்ஸ்கிக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.
எனவே போரை முடிவுக்கு கொண்டுவர கேட்டிருக்கிறார். இப்படி நடந்துவிட்டால் உக்ரைனில் அதிபர் தேர்தல் வரும். இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி ஜெயிக்க வாய்ப்பு குறைவு. ஆகவேதான் போரை நிறுத்த மாட்டேன் என அவர் ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டிருக்கிறார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications