காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஞ்சிபுரம் அருகே சுற்றுலா சென்று காரில் வீடு திரும்பிய போது விபத்து.. இருவர் பலி

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே விடுமுறையில் ஆன்மீக சுற்றுலா சென்று காரில் வீடு திரும்பிய போது விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் சாய் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் குடும்பத்தினர் தீபாவளி விடுமுறையில் ஆன்மீக சுற்றுலாவுக்காக காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கோவிலை சுற்றி பார்த்து காஞ்சிபுரம் வந்து விட்டு பின்னர் திரும்பி சென்னை செல்லும்போது மழையின் காரணமாக வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லூர் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

2 died after a Car met with an accident near Walajabath

காரில் பின்புறத்தில் அமர்ந்திருந்த ராஜன் (65), கனகம் (55) என இருவர் விபத்தில் சம்பவ இடத்திலே பலியாகிவிட்டனர். காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ஸ்ரீநாத் (34) , ஐஸ்வர்யா (29), அனந்தராஜ் (2) ஆகியோர் காரில் ஏர்பேக் இருந்ததால் உயிர் தப்பினர்.

2 died after a Car met with an accident near Walajabath

இவர்கள் படுகாயத்துடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர்களின் உடல்களை மீட்ட வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 died after a Car met with an accident near Walajabath
English summary
Car met with an accident and 2 died in Kanchipuram Walajabath. 3 were injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X