காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்.. இத்தனை கோடி வசூலா? வியக்க வைக்கும் அத்தி வரதர் கோவில்!

அத்திவரதர் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Athivaradhar Temple | ஒரே நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்..வியக்க வைக்கும் அத்தி வரதர்!- வீடியோ

    காஞ்சிபுரம்: அத்திவரதர் கோவிலில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை தற்போது நாடு முழுக்க பிரபலமாகி உள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவர் எழுந்தருளுவார் என்பதால், இவரை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள்.

    இந்த சிலை இரண்டு நாட்களில் மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது . 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. இதனால் 16-ம் தேதி வரை மட்டுமே பக்தர் தரிசனத்துக்கு வைக்கப்படும்.

    அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை! அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை!

    எத்தனை பேர் தரிசனம்

    எத்தனை பேர் தரிசனம்

    இந்நிலையில் கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பல லட்சம் மக்கள் தினமும் தரிசனம் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 10-15 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். ஆனால் போக போக தினமும் ஒரு லட்சம் பேர் வரை அந்த கோவிலில் தரிசனம் செய்தனர்.

    எப்படி

    எப்படி

    கடைசி 10 நாட்களில் தினமும் 2-3 லட்சம் பேர் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். நள்ளிரவில் இருந்து காத்திருந்து தரிசனம் செய்யும் மக்கள், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்கவும் தயாராக இருக்கிறார்கள். மிக முக்கியமாக விழா நாட்களில், ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் மக்கள் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள்.

    நேற்று என்ன

    நேற்று என்ன

    நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர். இரவு 7 மணி வரை 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். நேற்று காஞ்சியில் மழை பெய்ததை கூட மக்கள் பொருட்படுத்தவில்லை.

    உண்டியல்

    உண்டியல்

    இதனால் கடந்த 44 நாட்களில் அத்திவரதர் கோவிலில் ரூ. 6 கோடியே 81 லட்ச ரூபாய் ரொக்க பணமாக உண்டியலில் போடப்பட்டுள்ளது. 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களில் இன்னும் பல லட்சங்கள் காணிக்கையாக அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

    English summary
    More than 5 Lakh people visited Athi Vardar temple yesterday which highest of all time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X