தனியார் தொழிற்சாலை கேண்டீனில் சாப்பிட்ட 75 பெண்களுக்கு வாந்தி மயக்கம்! ‘ஒரே பீதி’ - என்ன நடந்தது?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில், இருசக்கரம் மற்றும் கார்ளுக்கான வயரிங் தயாரிக்கும், தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில், வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

இரவு உணவு - வாந்தி மயக்கம்
இந்நிலையில், இத்தொழிற்சாலையில் நேற்று இரவு ஷிப்ட்டில் வேலை செய்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், தொழிற்சாலையில் இயங்கி வரும் கேண்டினில் இரவு நேர உணவை சாப்பிட்டுள்ளனர். இரவு நேர உணவை சாப்பிட்டபோது, அந்த உணவில் பல்லி ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், பல்லி விழுந்த உணவை உண்டவர்களில் சுமார் 75க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த தொழிற்சாலை நிர்வாகம், வாந்தி மயக்கம் ஏற்பட்ட பெண் தொழிலாளர்களை உடனடியாக மீட்டு, தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சற்று கடுமையாக பாதிக்கப்பட்ட சில பெண்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இரவு நேர ஷிப்ட் நிறுத்தம்
மற்றவர்கள் பொது பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெறவில்லை என தனியார் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் காரணமாக தொழிற்சாலையில் இரவு நேர ஷிப்ட் உடனடியாக நிறுத்தப்பட்டு, பணிபுரிந்த அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் விசாரணை
மேலும், இது குறித்து தகவலறிந்து தொழிற்சாலையில் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சக தொழிலாளர்கள் அச்சம்
தொழிற்சாலையில் இரவு பணியின்போது, பல்லி விழுந்த உணவு உண்டவர்களில் சுமார் 75 பெண்கள் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, தொழிற்சாலையில் பணிபுரியும் சக தொழிலாளர்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications