காஞ்சிபுரத்தில் விழா கோலம்... அத்திவரதரை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பச்சை நிற ஆடையுடன் காட்சியளிக்கும் அத்திவரதரை மூன்றாம் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்தி வரதர், 30 நாட்களுக்கு சயன கோலத்திலும், அதைத் தொடர்ந்து 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். காஞ்சிபுரத்தில் மூன்றாம் நாளான இன்று பச்சை நிறத்துடன் காட்சியளிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமிகள் திருக்கோவில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். உலகப் பிரசித்தி பெற்ற ஆதி அத்தி வரதர் நிகழ்வு நேற்று முன் தினம் தொடங்கியது.

முதல் நாளில் 1 லட்சம் பக்தர்களூம் இரண்டாம் நாளில் 75 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்த நிலையில் இன்றும் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கின்றனர்.
எனினும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் எந்த வித சிரமும் இன்றி பக்தர்கள் எளிதாகவும் விரைவாகவும் தரிசனம் செய்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாற்றுத் திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நடக்க முடியாதவர்கள் வீல்சேர் மூலம் சென்று தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புமிக்க அத்தி வரதரை காண்பதற்காக உள்ளுர் வெளியூர் உள்ளிட வெளிமாநிலத்தில் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்த வண்ணமே உள்ளனர்.
அத்திவரதர் முதல் நாளன்று மஞ்சள் நிற ஆடையும் இரண்டாம் நாள் நேற்று நீலநிற ஆடையும் மூன்றாம் நாள் இன்று பச்சை நிற ஆடையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தினந்தோறும் அதிகாலை 5 மணி அளவில் சுப்ரபாதம் பாடலுடன் எழுந்து, அதன்பின் திருவாராதனை மற்றும் நெய்வேதியம் முடிந்தவுடன் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு 6 மணி முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் ஏராளமான அரசு அதிகாரிகள் என அனைவரும் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications