“அலர்ட்”.. எஸ்சி, எஸ்டிதான் பாஜக “டார்கெட்”.. அந்த விசயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மோசம் - திருமா
காஞ்சிபுரம்: தமிழகத்தில்தான் அம்பேத்கர் சிலை அவமரியாதை செய்யப்படுகிறது என்பது தனக்கு வருத்தம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்து இருக்கிறார்.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராம கூட்டு சாலையில் காஞ்சிபுரம் வடக்கு ஓன்றிய விடுதலை சிறுத்தைகள் கிளை சார்பாக ஆள் உயர அம்பேத்கர் அமைக்கப்பட்டது
இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் இளமாறன் தலைமையில் அம்பேத்கர் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது.

அம்பேத்கர் சிலை திறப்பு
இந்த விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவருமான திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையினை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த சிலையை அமைக்க செயல்பட்ட 22 பேருக்கு அம்பேத்கர் சிலை வழங்கி வாழ்த்தினார்.

திருமாவளவன் வேதனை
இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "கடந்த 15 ஆண்டுகளாக இந்த அம்பேத்கர் சிலையை அமைக்க பாடுபட்டனர். இந்த நிலையில் இந்த சிலையை திறப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே அம்பேத்கரின் சிலையை அமைப்பது மிகப்பெரூம் சவாலாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் மோசம்
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டுமே அம்பேத்கர் சிலையினை அவமரியாதையும் செய்கின்றனர். இது பெரும் வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டில் புதிய அம்பேத்கர் சிலைகளை அமைக்க இன்று வரை பெரும் சிரமம் ஏற்படுகிறது. பிற மாநிலங்களில் அம்பேத்கர் சிலைகள் பல இடங்களில் வைக்கப்படுகின்றன.

பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்
சட்டமன்ற, நாடாளுமன்ற வளாகத்தில் பிரம்மிக்க வைக்கும் வகையில் அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளன. அம்பேத்கர் என்பவர் ஒரு மடத்தின் மடாதிபதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். அம்பேத்கர் மற்றும் பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள்.

பட்டியலின மக்கள் குறி
தற்போது தமிழகத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்களை குறி வைத்து பாஜக செயல்படும் நிலையை கண்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நவம்பர் 6 ஆம் தேதி அமைதி அறப்போர் என்கிற வகையில் மனு ஸ்ருதி குறித்து பொதுமக்ள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பேடு வழங்க உள்ளது." என்று தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் விசிக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பார்வேந்தன் , காஞ்சி மண்டல செயலாளர் விடுதலைசெழியன் , மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் , மக்கள் மன்றம் நிர்வாகிகள் மகேஷ், ஜெர்சி, விசிகவை சேர்ந்த இந்திரா அம்பேத்கர்வளவன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின் , பருத்தி குளம் சேகர் , ஏரிக்கரை டேவிட் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் கீழ்கதிர்பூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications