“அவனை கேட்டீங்களா?” பிரதமரை ஒருமையில் பேசிய திமுக எம்.எல்.ஏ.. முதல்வர் ஆக்ஷன் எடுக்க பாஜக கோரிக்கை!
காஞ்சிபுரம்: பிரதமர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளார் திமுக எம்.எல்.ஏ எழிலரசன், திமுக தலைவர் ஸ்டாலின், எழிலரசனின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகு என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்கதிர்பூர், மேல்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் புதிய நியாய விலை கடைகள், புதிய அங்கன்வாடி மையம், பள்ளிகளுக்கு சுகாதார நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார்.

அப்போது கீழ்கதிர்பூர் பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனை முற்றுகையிட்டு எங்களுக்கு ஏன் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 கிடைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.
பெண்கள் சுற்றி நின்று சத்தம் போட்டு கேட்டதால் சட்டென்று கோபம் அடைந்த திமுக எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன், பத்தாண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி ஏமற்றினார்களே.. மோடியை ஏன் போய் கேட்கவில்லை... அவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே என பிரதமரை ஒருமையில் குறிப்பிட்டு ஆவேசமாக கேட்டார் எழிலரசன். உடனே கூட்டத்திலிருந்து பெண்மணி ஒருவர் மோடியை வர சொல்லுங்க.. நாங்க அவரிடம் கேட்கிறோம். நீங்கள் தானே எங்களிடம் வந்திருக்கிறீர்கள் என கேட்டனர்.
திமுக எம்.எல்.ஏ எழிலரசன் பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு மற்றும் துணைத் தலைவர் ஜம்போடை சங்கர் தலைமையில் பாஜகவினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எஸ்.பி சுதாகரை நேரில் சந்தித்து, பிரதமர் மோடியை இழிவாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ எழிலரசன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி கோரிக்கை விடுத்தனர்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பாரதப் பிரதமரை விமர்சிக்க தகுதியற்ற திமுக எம்எல்ஏ உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அவரது வீடு பாஜகவின் முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாராயணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "பொது மக்கள் மத்தியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனின் தரக்குறைவான பேச்சு, திமுக அரசின் தராதரத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் பிரதமர் குறித்து அநாகரீகமாக, தரக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சியின் உறுப்பினர்கள் பேசுவதற்கெல்லாம் கட்சி தலைமை பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தகாத நடத்தையை கண்டிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை. திமுக தலைவர் ஸ்டாலின், எழிலரசனின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு பெருமை சேர்க்கும். இல்லையேல் திமுகவின் சிறுமையை பெருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!












Click it and Unblock the Notifications