ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்.. போலீசாரை தாக்கிவிட்டு ஓட முயற்சி.. பிரபல ரவுடி விஷ்வா சுட்டுக்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுர் அருகே நடைபெற்ற என்கவுன்டரில் பிரபல ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில குற்ற வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஷாவை தேடி வந்தனர். இந்த நிலையில், தான் விஷ்வா, சுங்குசார் சத்திரம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சோகண்டி அருகே வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த என்கவுன்டரில் ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி விஷ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களில் நாட்டு வெடி குண்டுகள் வீசி ஆறுக்கும் மேற்பட்ட கொலைகள் அங்கு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் விஷ்வா விடம் போலீசார் விசரணை நடத்தினர். விஷ்வா மீது 6 கொலை வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, விஷ்வாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றுள்ளனர்.
அப்போதுதான் போலீசாரை தாக்கிவிட்டு விஷ்வா தப்ப முயன்றதாகவும் இதற்காக போலீசார் என்கவுன்டர் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மற்றும் டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். ரவுடி விஷ்வா நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளி காயம் அடைந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவர் மற்றும் பாஜகவை சேர்ந்த சங்கர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் விஷ்வா சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி விஷ்வாவை தேடி வந்த நிலையில், தான் தற்போது என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications