ஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை!
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் வைபவம் முடிவடைந்த நிலையில் அவர் குறித்த கவிதை ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார் அத்திவரதர். இந்த நிலையில் நேற்றுடன் தரிசனம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து இன்று அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார்.

கடந்த 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதருக்கு பிரியா விடை கொடுக்கும் பொருட்டு அவர் குறித்த கவிதை ஒன்று வாட்ஸ் ஆப்பில் உலவி வருகிறது. அந்த கவிதை பின்வருமாறு:
நெஞ்சங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு,
நீர்மஞ்சத்தில் நித்திரை செய்வீராக!
அனந்தசரசை 48 நாள் கடைந்ததற்கே
நாடு தாங்கவில்லையே.
பாற்கடலை மீண்டும் கடைந்தால் ?
குளத்தை கடைந்ததால் நீ வெளிவந்தாய்
குளம் கடையப்பட்ட அதே நேரத்தில்
மனித மனங்களும் கடையப்பட்டு
ஆழத்தில் இருந்த பக்தியும் வெளிப்பட்டது
வேரறுப்பேன் என்று வெறுத்ததவனும் வந்தான்.
கோட்பாடில்லா கொடியவரும் வந்தனர்.
பேட்டை தாதாவும் வந்தான்.
தள்ளாடும் தாத்தாவும் வந்தார்.
கலைத்துறையும் வந்தது.
ரகளைதுறையும் வந்தது.
சுக ஜனனமும் உன் சந்நிதியில் நிகழ்ந்தது.
மரணமும் உன் எல்லையில் நடந்தது.
முதல் தீர்த்தகாரரும், டாஸ்மாக் தீர்த்தக்காரரும்
ஒரே வரிசையில் நின்றனர்.
அத்தி அத்தி என்று உலகம் முழுவதும்
இத்திக்கில் திரும்பி நோக்க வைத்துவிட்டு
கண்வளர இதோ புறப்பட்டு விட்டாய்!
உன்னை கண்டவர் குதூகலிக்க
காணாதவர் கலங்கி நிற்கின்றனர்.
தண்ணீரின் அடியில் இருந்து நீ அன்றாடம்
அவர்களை நோக்க போகின்றாய்
என்பதை அறியாதவரே கலங்குவர்.
மவுரியம், குப்தம், சதவாகனம், பல்லவம்,
வாதாபி,சோழம், பாண்டியம், சேரம்,
சாளுக்கியம், கங்கம், ஹோயசலம், முகலாயம்,
கோல்கொண்டா, விஜயநகரம், ஆங்கில பேரரசு
என்று ஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை
அனைத்தையும் பார்த்து விட்டாய்,
மாற்றங்கள் அனைத்தையும் சந்தித்து விட்டு
இன்று காஷ்மீர் மாற்றத்தையும் செய்து விட்டு,
மீண்டும் நீரடியில் சென்று புதுகணக்கை
துவக்க போகிறாய்
சென்று வா அத்திவரதா !
பிழைத்து கிடக்க மாட்டேன் என்பது தெரிந்திருந்தும்
சம்பிரதாய வார்த்தையை கூறுகிறேன்.
பிழைத்து கிடந்தால்
2059-இல் சந்திப்போம்...
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications