உதயநிதிக்கு எகிறிய மவுசு.. காஞ்சிபுரத்தின் முதல் பெண் மேயரானார் மகாலட்சுமி.. இளைஞர் அணி பெருமிதம்
காஞ்சிபுரம் முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் தேர்வானார்
காஞ்சிபுரம்: புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யாராக இருக்கும் என்ற ஆர்வம் எழுந்தபடியே இருந்த நிலையில், திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றன.. இதில் 36-வது வார்டு உறுப்பினர் ஜானகிராமன், இறந்துவிட்டதால், அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
மற்ற 50 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடந்து முடிந்தது.. இதில், திமுக கூட்டணி கட்சிகள் 32 வார்டுகளில் வெற்றிபெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது.

வேட்பாளர்
புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்... அதேபோல 22-வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் குமரகுருநாதன் துணை மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.. இதனால் நேற்று முதலே பெரும் எதிர்பார்ப்பு இங்கு ஏற்பட்டு வந்தது.

திமுக வேட்பாளர் தோல்வி
இன்றைய தினம் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் 50 மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.. இதில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமாரை விட கூடுதலாக வாக்குகள் பெற்று மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்றுள்ளார்.. அதையடுத்து அவருக்கு வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நாராயணன் வழங்கினார்.

மகாலட்சுமி
மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயருக்கு 5கிலோ வெள்ளியிலான செங்கோல் மற்றும் கவுன் வழங்கப்பட்டு மேயர் இருக்கையில் மகாலட்சுமி யுவராஜ் முதன் முதலாக அமர்ந்தார்.. காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மகாலட்சுமி யுவராஜ் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க இடத்தினை பிடித்துள்ளார். திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ்வை எதிர்த்து திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

முதல் பெண் மேயர்
மேயர் வேட்பாளரான 36 வயதான மகாலட்சுமி, முதுகலைப் பட்டம் பெற்றவர்... தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்... அந்த பணியிலிருந்து விலகி காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்... இவரது கணவர் யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்... இப்போது புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுகவின் மகாலட்சுமி யுவராஜ் வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளார்.

குழப்பங்கள்
முன்னதாக இந்த வேட்பாளர் தேர்வில் சில குழப்பங்கள் ஏற்பட்டன.. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து திமுக கட்சிக்கு வந்த சோபன் குமார் என்பவர் திமுகவில் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பதவி வகித்து வருகிறார்... உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான இவர், இவரது மனைவி சூர்யாவை 8 ஆவது வார்டில் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், தலைமை கழகம் 9வது வார்டில் போட்டியிட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமிக்கு மேயர் பதவி ஒதுக்கி திமுக வேட்பாளராக அறிவித்தது.

திமுக பூசல்
இதற்கு சோபன் குமார் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மனைவி சூர்யாவையும் மேயர் பதவிக்கு நிற்க வைத்தார். பல்வேறு தரப்பில் ஆதரவு கேட்டு வந்தார்.. ஆனால், இறுதியி, திமுக தலைமை அறிவித்த மகாலட்சுமி யுவராஜ் 29 வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த கவுன்சிலர் சூர்யா, 20 வாக்குகளையும் பெற்றனர்.. ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவாகிய நிலையில், மகாலட்சுமியே மேயராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து, காஞ்சிபுரம் திமுகவில் மேலும் உட்கட்சி பூசல் அதிகமாகும் என்றே தெரிகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications