காஞ்சிபுரத்தை கலங்கடித்த ஜோடி.. கவர்ச்சியோ கவர்ச்சி.. யார் யாருங்க.. அதுக்குள்ள போஸ்டர் ஒட்டிட்டாங்க
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தையே அதிர வைத்துள்ளனர் அருள் - சிவசங்கரி தம்பதியினர்.. இவர்களை தான் பொதுமக்கள் தேடி கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் அருள் - சிவசங்கரி தம்பதியினர்.. தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் அருள்.. மற்றொருபுறம் பைனாஸ் கம்பெனியையும் நடத்தி வருகிறார்.. அருள் காலேஜ் சென்றுவிடுவதால், பிரதான பொறுப்பை இவரது மனைவி சிவசங்கரியிடம்தான் இருந்திருக்கிறது.

குலுக்கல் சீட்டு: புரொபசர் என்பதால், அந்த பகுதி மக்கள் இவரிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.. அதனால்தான், கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே, இந்த பைனாஸ் கம்பெனியை அருள் நடத்தி வர முடிந்திருக்கிறது.. நாளடைவில், மாதாந்திர ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற சீட்டு குரூப்களையும், இந்த தம்பதிகள் தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இதற்கு இந்த தம்பதி கையிலெடுத்த ஆயுதம், "கவர்ச்சி விளம்பரம்"
ஒவ்வொரு சீட்டு குரூப்களுக்கும், ஒவ்வொரு விதமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.. இப்படித்தான், கடந்த வருடம் புதிதாக ஒரு சீட்டு திட்டத்தை துவங்கியிருக்கிறார்கள்..
அதாவது, மாதம் ரூ.1,000 கட்டினாலே போதும், வருட கடைசியில் கட்டிய தொகைக்கு கூடுதலான மதிப்பில் தங்க நகை வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இதை பார்த்ததும் ஏராளமானோர், இந்த நகை திட்டத்தில் சேர முன்வந்தனர்..
30 குழுக்கள்: அதாவது, ஒரு குழுவுக்கு 100 பேர் என மொத்தம் 30 குழுக்கள் சேர்க்கப்பட்டது.. இறுதியில் 3,000 பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டது. இன்னும் இதுபோல, வேறு சில சீட்டு குரூப்களையும் சேர்த்து சுமார் ரூ.10 கோடி வரை இந்த தம்பதி பணம் வசூலித்திருக்கிறார்களாம்..
ஆனாலும், சீட்டுக்கான முதிர்வு காலம் முடிந்தும்கூட, பணம் தரவில்லை.. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு சாக்கு சொல்லி, பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்கள்.
அவர்கள் அறிவித்த நேரத்தில், எந்தவித சலுகையும் தரப்படவில்லை.. தங்க நகை திட்டத்திலும்கூட, வருட கடைசியில் தருவதாக சொன்ன தங்க நகையை தரவில்லை.. பாதிக்கப்பட்டவர்கள் தம்பதியிடம் பணம் கேட்க போனால், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சி: இறுதியில் என்ன செய்வதென்றே தெரியாமல், பாதிக்கப்பட்டவர்கள், சிவகாஞ்சி போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார்கள்.. ஆனால், போலீஸ் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்..
ஏற்கனவே அதிர்ச்சியாகியிருந்த மக்களுக்கு, காவல்துறையின் பாராமுகம் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே ஒன்று சேர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தம்பதியின் போட்டோக்களை போட்டு போஸ்டர் அடித்து காஞ்சிபுரம் முழுக்க ஒட்டிவிட்டார்கள்.
பிறகு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. ஆபீசுக்கு அந்த போஸ்டருடன் போனார்கள்.. தம்பதியினரின் மோசடி குறித்து, புகாராகவும், மனு அளித்தார்கள்.. அந்த மனுவின்பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.. அதற்கு பிறகே, பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள்.. காஞ்சிபுரம் முழுக்க இந்த தம்பதியினரின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications