மனைவி பிரிந்து போனதை தாங்காமல் மண்ணெண்ணெய் ஊற்றிய முருகன்.. காஞ்சிபுரத்தில் சோகம்
காஞ்சிபுரம்: 4 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியுடன் பிரிந்து வாழ்வதை தாங்க முடியாமல் டெய்லர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டர். இந்த சோகமான சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் அருணாச்சல நகர் பகுதியில் வசிப்பவர் முருகன் . இவர் அருகில் டெய்லர் கடையை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவருக்கு 10 வயதில் ஆணும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து பாண்டிச்சேரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு உண்டான முருகன் தினந்தோறும் அதிக அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் கூறினார்.
இந்நிலையில் இன்று காலை முருகன் சமையல் அறையில் வைத்து இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீயிட்டுக் கொண்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்து வருவதற்குள் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தட்டார்மடம் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. பரபரப்பு
குடும்ப பிரச்சனைக்காக தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.