ஓபிஎஸ்ஸுக்கு எதிரியாக வந்த வருண பகவான்.. தொடர் மழையால் காஞ்சிபுரம் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு!
காஞ்சிபுரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டம் இன்று மாலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
அதிமுகவில் தலைமை பதவி யாருக்கு என்கிற போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தனி அணியாகச் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். அதோடு, திருச்சியில் மாநாட்டையும் நடத்தினார். அடுத்தகட்டமாக ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது புரட்சிப் பயணத்தை காஞ்சிபுரத்தில் இன்று மாலை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக காஞ்சிபுரம் களியனூர் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 10 ஆயிரம் பேருக்கும் மேல் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
களியனூர் கிராமத்தில் இன்று மாலை இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கியது முதலே மழை பெய்யத் தொடங்கியது. அங்கு மழை கொட்டித் தீர்த்து வருவதால், பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் பலரும் சிதறி ஓடினர். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த டென்ட் பகுதிகளிலும் மேடைகளிலும் பலரும் தஞ்சமடைந்தனர். இதனால் பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது.

எனினும், புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மழையையும் பொருட்படுத்தாது மேடைக்கு வந்து சேர்ந்தார். மழையில் அவர் நனையாமல் இருக்க நிர்வாகிகள் சிலர், அவருக்குக் குடை பிடித்து அழைத்துச் சென்றனர். மேடையை நோக்கிச் சென்ற அவர் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.
மேடையில் போய் அமர்ந்த ஓபிஎஸ்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலரும் அவரை வரவேற்றுப் பேசினர். எனினும், தொடர்ந்து கனமழை பெய்தபடியே இருந்ததால், ஓ.பன்னீர்செல்வம் தொடங்கவிருந்த புரட்சிப் பயண பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூட்டம் தடைபட்டதாகவும், விரைவில் இக்கூட்டம் காஞ்சிபுரத்தில் மீண்டும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இருந்து இருந்து புரட்சிப் பயணம் தொடங்கிய நிலையில், ஆரம்பமே மழையால் சொதப்பியுள்ளது அவரது அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications