துர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்!
அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வருகை தந்திருந்தார் ராஜாத்தி அம்மாள்
Recommended Video
காஞ்சிபுரம்: திமுக எம்பி கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வருகை தந்து, அத்திவரதரை தரிசனம் செய்தார்.
அத்திவரதர் விழாவால் காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தினந்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசிக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.
சென்ற வாரம் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்திருந்தார். சிறப்பு தரிசனம் செய்த அவர், பச்சை நிற பட்டுபுடவையை சாத்தி அத்திவரதரை தரிசித்து விட்டு சென்றார்.

துர்கா ஸ்டாலின்
இந்நிலையில், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழியின் அம்மாவுமான ராஜாத்தி அம்மாள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தந்தார். கருணாநிதியை போலவே கனிமொழியும் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருப்பவர்.

கனிமொழி
ஆனால் ராஜாத்தி அம்மாள் அப்படி கிடையாது. தனது மகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றவர். அந்த அளவுக்கு கடவுளை மனதார வேண்டுபவர்.

காஞ்சிபுரம்
இன்று காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்திருந்தார். வயோதிகம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் தயாளு அம்மாளைதான் வீல் சேரில் ஓரிரு சமயம் நம்மால் காண முடிந்தது. ஆனால் தற்போது ராஜாத்தி அம்மாளும் வீல் சேரில் கோயிலுக்கு வந்திருந்தார். அவரை குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வந்திருந்தனர். அத்திவரதரை தரிசித்த ராஜாத்தி அம்மாள் உடன் வந்தவர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்

விஐபிக்கள்
அத்திவரதரைக் காண ஏகப்பட்ட அரசியல் புள்ளிகள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். இதில் தேசியம், திராவிடம் என்று எதுவும் பாரபட்சம் இல்லை. சமீபத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர், மொத்தமாக வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போனார்கள். இப்போது கருணாநிதி குடும்பத்திலிருந்து 2வது முக்கியஸ்தர் வந்து போயுள்ளார். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர் அரசியல் விஐபிகளும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications