வேகமாக நிரம்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி.. 30 கிராமங்களுக்கு அலார்ட்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. .
Recommended Video
உபரி நீர் வெளியேறுவதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது தென்னேரி ஏரி.இந்த ஏரி நீரை பயன்படுத்தி 5,588 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் பாசன வசதி அடைகிறது. தென்னேரி மஞ்சம்மேடு, விளாகம், தென்னேரி அகரம், அயிமிச்சேரி, வாரணவாசி, தொள்ளாழி,தேவரியம்பாக்கம், திருவங்கரனை உள்ளிட்ட கிராம விவசாயத்திற்கு தென்னேரி ஏரி நீர் பயன்படுகிறது.

தற்போது நிவர் புயல் கன மழை தொடர்ச்சியாக பெய்து வரும் காரணத்தினால் தென்னேரி தனது முழு கொள்ளளவான 18 அடியை வேகமாக எட்டி வரும் நிலையில் உள்ளது.
இதன் காரணமாக மேட்டுகாலனி பகுதியில் உள்ள தென்னேரி ஏரியின் கலங்களில் உபரிநீர் வெளியேறி வருகிறது.
இதன் காரணமாக வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னேரி ஏரி கிராமம் அருகே உள்ள மஞ்சமேடு பகுதி தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளநீர் இரண்டு அடிக்கு மேல் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் 15-த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடுதலாக 15 கிலோமீட்டர் தூரம் தூரம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏரியிலிருந்து மழை வெள்ள உபரி நீர் வெளியேறி வருவதால் தென்னேரி ஏரியை ஒட்டிகரையோரம் உள்ள அகரம்,வாரணவாசி,கட்டவாக்கம், அவளூர், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னேரி கலங்கல் நீரால் மஞ்சமேடு தரைப்பாலம் மூழ்கியுள்ளதால் பொது மக்கள் பயன்பாட்டிற்கும்,போக்குவரத்து பயன்பாட்டிற்கும் ஏதுவாக தரைப்பாலத்தை உயர்த்தி கட்டிட வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications