கொரோனா- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை- சுகாதார துறை செயலாளர்
காஞ்சிபுரம்: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை பாயும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் உள்ள பிள்ளையார் பாளையத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொரோனாவை தடுப்பது குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கொரோனா சிகிச்சை தொடர்பாக அரசு ஆணையை பின்பற்றி பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். கொரோனவைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், நோயாளிகளிடம் அதிகமாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு மருத்துவமனைகளப் பொறுத்தவரை அனைத்து உயர்தர மருந்துகள் தற்போது கையிருப்பு உள்ளன.

தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் ஏஜெண்டுகள் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் பல இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கள்ளத்தனமாக மருந்து கொண்டுவந்து விற்பது குறித்து அறிந்து பிரத்யேகமாக 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் மூலம் ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக மருந்து விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு உயர் தர மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் அரசு மூலமாக அவர்களுக்கு வழங்குவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
Recommended Video
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications