கொரோனா- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை- சுகாதார துறை செயலாளர்
காஞ்சிபுரம்: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை பாயும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் உள்ள பிள்ளையார் பாளையத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொரோனாவை தடுப்பது குறித்து விளக்கி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கொரோனா சிகிச்சை தொடர்பாக அரசு ஆணையை பின்பற்றி பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். கொரோனவைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், நோயாளிகளிடம் அதிகமாக வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசு மருத்துவமனைகளப் பொறுத்தவரை அனைத்து உயர்தர மருந்துகள் தற்போது கையிருப்பு உள்ளன.

தனியார் மருத்துவமனையில் உயிர் காக்கும் உயர் தர மருந்துகள் ஏஜெண்டுகள் மூலம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் பல இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து கள்ளத்தனமாக மருந்து கொண்டுவந்து விற்பது குறித்து அறிந்து பிரத்யேகமாக 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் மூலம் ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக மருந்து விற்பனை செய்த ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு உயர் தர மருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் அரசு மூலமாக அவர்களுக்கு வழங்குவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
Recommended Video
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications